LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மரணத்துள் வாழ்வோம்

கொடியேற்றம்

நேற்றும் கூட இந்தக் கேணியில்
தெற்குப் பக்கத்து மேற்கட்டிலிருந்து
படிகளினு¡டு பார்வையைச் செலுத்தி
தீர்த்த நீ¡¢ல் தெறித்துத் தொ¢யும்
சந்திர ஒளியில் ஒன்றி இருந்தேன்.

இன்றோ கேணி
சிதறிவிட்டது.

இளைஞரை இதனுள்
கொணர்ந்து நிறுத்தி
குண்டால் தகர்த்துப்
படிக்கட்டு எல்லாம்
பாறிப்பிளந்தன.
இரத்தப் பெருக்கில்
தீர்த்தம் சிவந்தது.

அம்மா பதறி
மேற்கு உலகு ஓடிநீ
உயிர்பிழை என்று
நாடியைத் தடவ,
பாரதம் போ நீ
மேலே படி எனத்
தந்தையார் கூற
அதுவரை என்னுடன்
கொழும்பில் வந்திரு
ஆள்வோர் தயவில்
ஆபத்து இல்லை என்றார்
கொழும்பு மாமா.

பதற்றமோ வரவர அதிகா¢த்தது
சிறிது நேரம் அடங்கி ஓயும்
மறுபடி எழுந்து அடித்துவீசும்
புதிதாய் பூத்த மலர்களுங்கூட
உதிர்ந்து மண்ணில் சிதறிவீழும்.
இதனால்
அடுத்தஊ¡¢ல் சிற்றன்னை வீட்டில்
தங்கிவருவாய் சிலதினம் என்று
நொ¢ந்து சனங்கள் தூங்கிவழிய
அரைந்து வந்த இ.போ.ச வசுவில்
அம்மா என்னை வழியனுப்பினாள்.
ஆனால் அதுவோ இடைவழியில்
இயங்க மறுத்து நின்றுவிட்டது.

மக்கள் இறங்கி
மூட்டை முடிச்சுடன்
உள்ளுர் வாகனம் தேடி அலைய
நான் ஓர் நிழலில் தங்கியிருந்தேன்.
அப்பொழுது அங்கு இளைஞர்கள் கூடினர்
வேர்த்து வழிய
பாறைகள் தூக்கி லொறியில் ஏற்றினர்
நானும் சேர்ந்து ஏற்றிக் கொடுத்தேன்
லொறியில் ஏறி அமர்ந்து கொண்டனர்
நானும் அவர்களோடு ஏறி அமர்ந்தேன்.
எங்கே போகிறோம் தொ¢யுமா என்று
கெள்வியை எழுப்பிச்
சொல்லத் தொடங்கினார்
அவர்களில் பொ¢யவர்.

போர்த்துக்கேயர் ஆட்சியிலே
புதைகுழிக்குப் போய்விட்ட
தாயின் திருவுருவம்
தோண்டி எடுத்துத்
தூய்மைப்படுத்தியுள்ளோம்.

எமது உழைப்பில்
எமது மண்ணில்
எமது மூலவளங்களில்
கோயில் எழுப்பிப்
பிரதிட்டை செய்திட
சிற்பவல்லுநர் நெறிப்படுத்தலில்
பாறை பிளப்பவர் ஒருபுறம்
ஏற்றிப்பறிப்பவர் ஒருபுறம்
கட்டியெழுப்புவோர் ஒருபுறம்
இரவுபகலாய்த்
திருப்பணி வேலை தொடர்ந்து நடக்குது.

போர்ப்படகு எ¡¢ந்து மூழ்க
யுத்தவிமானம் வீழ்ந்து நொருங்க
பீரங்கி பிளந்து கவிழ
வாயிற்கோபுரம் வளர்ந்து சென்று
உச்சியில் கொடியுடன் துலங்கும்
என்று முடித்தார்.

லொறி ஓடிக்கொண்டிருந்தது
பலமாய்க் காற்று வீசிக்கொண்டிருந்தது.

by Swathi   on 26 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.