*தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, கவனத்துடன் கட்டுப்பாடும் வேண்டும்*
தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கினை அறிவித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலை மிகுந்த உயிரிழப்புகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்திய நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. கொரோனா தொற்றின் பரவல் கணிசமாக குறைந்துள்ள நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அரசு தளர்வுளுடன் கூடிய ஊரடங்கினை அறிவித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலை முடிவுக்கு வரவில்லை என்பதை மக்கள் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். கவனமின்றி செயல்பட்டால் அது நம் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை மக்கள் மறக்கக் கூடாது.உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கங்கள்அதிர்ச்சிக்கு உட்படுத்துவதாக இருந்து வருவதை மக்கள் மறந்துவிடக்கூடாது.அருகாமையிலோ நம் வீட்டிலோ அதன் விளைவை கண்கூடாகப் பார்க்கும் நிலை இருந்தது. எனவே இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காலத்தில் கவனத்தோடு, கட்டுப்பாடுகளுடன் நாம் இருக்க வேண்டியது அவசியம். *நிச்சயம் செய்யுங்கள்* ✓ சத்துள்ள உணவு முறையைக் கடைபிடியுங்கள்.✓முகக் கவசம் உயிர்க்கவசம் என்பதை மறவாமல் வெளியில் எங்கு சென்றாலும் தவறாமல் அணிந்திருங்கள். ✓கொரோனா கிருமிகளைக் கொல்லும் சுத்திகரிப்பு திரவங்களைக் கொண்டு கைகளை அடிக்கடி கழுவுங்கள். ✓கடைகள் திறந்திருக்கிறது என்று அடிக்கடி செல்லாமல், ஒரே முறையில் பொருட்களைச் சரியாக வாங்கி வந்து விடுங்கள். ✓வீணாக வெளியில் செல்வது உயிருக்கே உலை வைத்துவிடும் என்பதை நினைவில் கொண்டு தேவையின்றி வெளியே செல்லாதிருங்கள். ✓தடுப்பூசி போட்டுக் கொள்வது ஆபத்தைக் குறைக்கும். இப்போது மட்டுமல்ல கொரோனா கிருமி தாக்கம் முற்றிலும் ஒழியும் வரை நாம் இப்படிப்பட்ட கவனத்தோடு இருக்க வேண்டியது மிக அவசியம்.
|