LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1226 - கற்பியல்

Next Kural >

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
('இன்று இன்னையாகின்ற நீ, அன்று அவர் பிரிவிற்கு உடம்பட்டது என்னை'? என்றாட்குச் சொல்லியது.)மாலை நோய் செய்தல் -முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பஞ்செய்து போந்த மாலை இன்று பகையாய்த் துன்பஞ்செய்தலை; மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன் -காதலர் பிரிதற்கு முன்னே அறியப் பெற்றிலேன். ('இங்ஙனம் வேறுபடுதல் அறிந்திலேன்: அறிந்தேனாயின், அவர் பிரிவிற்கு உடம்படேன்', என்பதாம்.)
மணக்குடவர் உரை:
மாலைப்பொழுது நோய் செய்தலை என்னோடு கூடினவர் பிரியாத காலத்தே அறியப் பெற்றிலேன். அறிந்தேனாயின், இது நோய் செய்யுமென்று கூறியிருப்பேன். இது மாலையால் வருத்தமுற்ற தலைமகள் தலைமகனை நினைந்து கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
[இன்று இங்ஙன மாகின்ற நீ அவர் பிரிவிற் குடம்பட்ட தெங்ஙனம் என்ற தோழிக்குச் சொல்லியது.] மாலை நோய் செய்தல் -முன்பெல்லாம் எனக்கு இன்பஞ் செய்து வந்த மாலை. அதற்கு நேர்மாறாக இன்று துன்பஞ் செய்யு மென்பதை; மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன்-காதலர் பிரிவிற்கு முன் நான் அறியவே யில்லை. அறிந்திருந்தேனாயின் அவர் பிரிவிற்கு உடம்பட் டிரேன் என்பதாம்.
கலைஞர் உரை:
மாலைக்காலம் இப்படியெல்லாம் இன்னல் விளைவிக்கக் கூடியது என்பதைக் காதலர் என்னை விட்டுப் பிரியாமல் இருந்த போது நான் அறிந்திருக்கவில்லை.
சாலமன் பாப்பையா உரை:
முன்பு எனக்கு மகிழ்ச்சி தந்த மாலைப்பொழுது இப்படித் துன்பம் தரும் என்பதை, என்னை மணந்த காதலர் என்னைப் பிரிவதற்கு முன்பு நான் அறிந்தது கூட இல்லை.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
என் காதலர் என்னைவிட்டுப் பிரியாமல் என்னுடன் இருக்கிற காலங்களில் இந்த மாலைப்பொழுது எனக்குத் துன்பம் உண்டாக்கினதில்லையே!
Translation
The pangs that evening brings I never knew, Till he, my wedded spouse, from me withdrew.
Explanation
Previous to my husband's departure, I know not the painful nature of evening.
Transliteration
Maalainoi Seydhal Manandhaar Akalaadha Kaalai Arindha Thilen

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >