|
|||||
மாம்பழத்திலிருந்து தோல் பொருட்கள் தயாரிப்பு. சென்னை விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு |
|||||
உலகம் முழுவதும் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தியே நீண்ட நாளுக்குப் பொருட்களைத் தயாரிக்க முடியாது. ஏனென்றால் ஒரு கட்டத்தில் அதற்கு பற்றாக்குறை ஏற்பட்டு விலை அதிகரித்து சாமானிய மக்களால் பயன்படுத்த முடியாமல் போகலாம்.
***********************************
இதனைக் கருத்தில் இயற்கைப் பொருளுக்கு மாற்றாகப் புதிய கண்டுபிடிப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. குறிப்பாகச் சுற்றுச்சூழலுக்கு உகந்த கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிபுணர்கள் தற்போது அதிகளவில் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.
*********************
தொழில்நுட்ப உரிமை வழங்கியுள்ளது
*************************
உதாரணமாக ஆடு, மாடுகள் போன்ற விலங்குகளின் தோலிலிருந்து தயாரிக்கப்படும் தோல் பொருட்களைச் சொல்லலாம். இயற்கை தோலுக்குத் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகம் போன்ற காரணங்களால் செயற்கை தோலை விஞ்ஞானிகள் உருவாக்கினர். தற்போது செயற்கை தோலுக்கு மாற்றாக மாம்பழக் கூழை பயன்படுத்தித் தோல் பொருட்களைச் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
***********************
சென்னையில் செயல்படும் மத்தியத் தோல் ஆராய்ச்சி நிறுவனம், மாம்பழக் கூழை பயன்படுத்தித் தோல் போன்ற பொருட்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. மும்பை தளமாக கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனமான அமாதி கிரீன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு இதற்கான தொழில்நுட்ப உரிமை வழங்கியுள்ளது.
*****************************
மத்தியத் தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி பி.தணிகைவேலன் கூறுகையில், மாம்பழக் கூழுடன் பயோபாலிமர்-ஐ திரவ அல்லது தூள் வடிவில் கலக்கப்படுகிறது. பின்னர் அது ஒரு எளிய முறையின் மூலம் தாள் போன்ற பொருளாக மாற்றப்படும். பின்பு அதற்கு மேற்பரப்பு பூச்சு மற்றும் அலங்கார வடிவங்கள் சேர்க்கப்படும்.
**************************
திரவ அல்லது தூள் வடிவில் கலக்கப்படுகிறது
***********************
சென்னையில் செயல்படும் மத்தியத் தோல் ஆராய்ச்சி நிறுவனம், மாம்பழக் கூழை பயன்படுத்தித் தோல் போன்ற பொருட்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. மும்பை தளமாகக் கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனமான அமாதி கிரீன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு இதற்கான தொழில்நுட்ப உரிமை வழங்கியுள்ளது. மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி பி.தணிகைவேலன் கூறுகையில், மாம்பழக் கூழுடன் பயோபாலிமர்-ஐ திரவ அல்லது தூள் வடிவில் கலக்கப்படுகிறது. பின்னர் அது ஓர் எளிய முறையின் மூலம் தாள் போன்ற பொருளாக மாற்றப்படும். பின்பு அதற்கு மேற்பரப்பு பூச்சு மற்றும் அலங்கார வடிவங்கள் சேர்க்கப்படும். இதனைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட மேங்கோ லெதர் பைகள் மற்றும் லேப்டாப் பைகள் ஆயுள் சோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளன. தற்போது காலணிகளில் பயன்படுத்தும் வகையில் இந்தப் பொருளின் சிறப்பு இயல்புகளை மேம்படுத்துவதற்கான பணிகள் செய்யப்படுகிறது.
*******************************
இழுவிசை வலிமை மற்றும் ஆயுட்காலம் ஆகியவற்றின் அடிப்படையில் பார்த்தால் இயற்கையான தோலுடன் போட்டியிடக்கூடிய பொருள் எதுவும் இல்லை. கடந்த 50 ஆண்டுகளாக சந்தையில் இருக்கும் பி.வி.சி. மற்றும் பி.யு. போன்ற செயற்கை தோலால் செய்யப்பட்ட பொருட்களை வேண்டாம் என்றும் குப்பையில் போடும்போது, அவை மக்குவதற்கு நீண்ட காலம் எடுக்கும். அதேசமயம் நாங்கள் செய்தது, ஒரு இயற்கைப் பொருளை (மாம்பழக் கூழ்) சுற்றுச்சூழலுக்கு உகந்த பாலிமருடன் இணைத்து மக்கள் தோல் போன்ற பொருளை உருவாக்கியுள்ளோம்.
********************************
சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகள் மற்றும் பைகளை உருவாக்க புதுப்பாங்கு நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகளுடன் நாங்கள் ஒத்துழைப்போம்.
*******************************
இந்த பொருளை உற்பத்தி செய்வதற்கான செலவு செயற்கை தோலைக் காட்டிலும் 60 சதவீதம் குறைவாகும். தற்சமயம் உலக அளவில் மாம்பழத்தை அடிப்படையாகக் கொண்ட தோல் போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரே நிறுவனம் நெதர்லாந்தில் உள்ளது எனத் தெரிவித்தார்.
***************************
விவசாயிகளுக்குப் பெரிய வரப் பிரசாதம்
*********************************
சர்வதேச அளவில் மாம்பழ உற்பத்தியில் மிகப் பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது. ஆண்டுக்குச் சுமார் 2 கோடி டன் மாம்பழம் உற்பத்தி செய்யப்படுகிறது. இருப்பினும், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்குப் பொருந்தாத காரணத்தால் இதில் 40 சதவீதம் வரை விளைநிலங்களிலேயே கழிக்கப்படுகின்றன. இது விவசாயிகளுக்குப் பெரிய வருமான இழப்பாகும். அதேசமயம் மாம்பழக் கூழை பயன்படுத்தித் தோல் போன்ற பொருட்களைத் தயாரிக்கும் இந்த புதிய தொழில்நுட்பம் முழு வீச்சில் பயன்பாட்டுக்கு வந்தால் விவசாயிகளுக்குப் பெரிய வரப் பிரசாதமாக இருக்கும்.
உலகம் முழுவதும் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தியே நீண்ட நாளுக்குப் பொருட்களைத் தயாரிக்க முடியாது. ஏனென்றால் ஒரு கட்டத்தில் அதற்கு பற்றாக்குறை ஏற்பட்டு விலை அதிகரித்து சாமானிய மக்களால் பயன்படுத்த முடியாமல் போகலாம். இதனைக் கருத்தில் இயற்கைப் பொருளுக்கு மாற்றாகப் புதிய கண்டுபிடிப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. குறிப்பாகச் சுற்றுச்சூழலுக்கு உகந்த கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிபுணர்கள் தற்போது அதிகளவில் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். தொழில்நுட்ப உரிமை வழங்கியுள்ளது உதாரணமாக ஆடு, மாடுகள் போன்ற விலங்குகளின் தோலிலிருந்து தயாரிக்கப்படும் தோல் பொருட்களைச் சொல்லலாம். இயற்கை தோலுக்குத் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகம் போன்ற காரணங்களால் செயற்கை தோலை விஞ்ஞானிகள் உருவாக்கினர். தற்போது செயற்கை தோலுக்கு மாற்றாக மாம்பழக் கூழை பயன்படுத்தித் தோல் பொருட்களைச் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சென்னையில் செயல்படும் மத்தியத் தோல் ஆராய்ச்சி நிறுவனம், மாம்பழக் கூழை பயன்படுத்தித் தோல் போன்ற பொருட்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. மும்பை தளமாக கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனமான அமாதி கிரீன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு இதற்கான தொழில்நுட்ப உரிமை வழங்கியுள்ளது. மத்தியத் தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி பி.தணிகைவேலன் கூறுகையில், மாம்பழக் கூழுடன் பயோபாலிமர்-ஐ திரவ அல்லது தூள் வடிவில் கலக்கப்படுகிறது. பின்னர் அது ஒரு எளிய முறையின் மூலம் தாள் போன்ற பொருளாக மாற்றப்படும். பின்பு அதற்கு மேற்பரப்பு பூச்சு மற்றும் அலங்கார வடிவங்கள் சேர்க்கப்படும். திரவ அல்லது தூள் வடிவில் கலக்கப்படுகிறது சென்னையில் செயல்படும் மத்தியத் தோல் ஆராய்ச்சி நிறுவனம், மாம்பழக் கூழை பயன்படுத்தித் தோல் போன்ற பொருட்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. மும்பை தளமாகக் கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனமான அமாதி கிரீன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு இதற்கான தொழில்நுட்ப உரிமை வழங்கியுள்ளது. மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி பி.தணிகைவேலன் கூறுகையில், மாம்பழக் கூழுடன் பயோபாலிமர்-ஐ திரவ அல்லது தூள் வடிவில் கலக்கப்படுகிறது. பின்னர் அது ஓர் எளிய முறையின் மூலம் தாள் போன்ற பொருளாக மாற்றப்படும். பின்பு அதற்கு மேற்பரப்பு பூச்சு மற்றும் அலங்கார வடிவங்கள் சேர்க்கப்படும். இதனைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட மேங்கோ லெதர் பைகள் மற்றும் லேப்டாப் பைகள் ஆயுள் சோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளன. தற்போது காலணிகளில் பயன்படுத்தும் வகையில் இந்தப் பொருளின் சிறப்பு இயல்புகளை மேம்படுத்துவதற்கான பணிகள் செய்யப்படுகிறது. இழுவிசை வலிமை மற்றும் ஆயுட்காலம் ஆகியவற்றின் அடிப்படையில் பார்த்தால் இயற்கையான தோலுடன் போட்டியிடக்கூடிய பொருள் எதுவும் இல்லை. கடந்த 50 ஆண்டுகளாக சந்தையில் இருக்கும் பி.வி.சி. மற்றும் பி.யு. போன்ற செயற்கை தோலால் செய்யப்பட்ட பொருட்களை வேண்டாம் என்றும் குப்பையில் போடும்போது, அவை மக்குவதற்கு நீண்ட காலம் எடுக்கும். அதேசமயம் நாங்கள் செய்தது, ஒரு இயற்கைப் பொருளை (மாம்பழக் கூழ்) சுற்றுச்சூழலுக்கு உகந்த பாலிமருடன் இணைத்து மக்கள் தோல் போன்ற பொருளை உருவாக்கியுள்ளோம். சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகள் மற்றும் பைகளை உருவாக்க புதுப்பாங்கு நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகளுடன் நாங்கள் ஒத்துழைப்போம். இந்த பொருளை உற்பத்தி செய்வதற்கான செலவு செயற்கை தோலைக் காட்டிலும் 60 சதவீதம் குறைவாகும். தற்சமயம் உலக அளவில் மாம்பழத்தை அடிப்படையாகக் கொண்ட தோல் போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரே நிறுவனம் நெதர்லாந்தில் உள்ளது எனத் தெரிவித்தார். விவசாயிகளுக்குப் பெரிய வரப் பிரசாதம் சர்வதேச அளவில் மாம்பழ உற்பத்தியில் மிகப் பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது. ஆண்டுக்குச் சுமார் 2 கோடி டன் மாம்பழம் உற்பத்தி செய்யப்படுகிறது. இருப்பினும், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்குப் பொருந்தாத காரணத்தால் இதில் 40 சதவீதம் வரை விளைநிலங்களிலேயே கழிக்கப்படுகின்றன. இது விவசாயிகளுக்குப் பெரிய வருமான இழப்பாகும். அதேசமயம் மாம்பழக் கூழை பயன்படுத்தித் தோல் போன்ற பொருட்களைத் தயாரிக்கும் இந்த புதிய தொழில்நுட்பம் முழு வீச்சில் பயன்பாட்டுக்கு வந்தால் விவசாயிகளுக்குப் பெரிய வரப் பிரசாதமாக இருக்கும்.
|
|||||
by Kumar on 23 Dec 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|