LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்.

தமிழக உயர்கல்வித் துறை மற்றும் பிரிட்டிஷ் தூதரகம் சார்பில் இளம் தொழில் முறை (Young Professionals Scheme-YPS) திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் 18 வயது முதல் 30 வயது வரை உள்ள 3,000 இளைஞர்களிடம் விசா விண்ணப்பம் பெறும் நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

 

இந்த நிகழ்ச்சிக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் தலைமை தாங்கினார். இதில் பிரிட்டிஷ் துணைத் தூதர் அலெக்ஸ் எல்லிஸ், வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் குடியேற்றக் கொள்கை மற்றும் நலன் இயக்குநர் நிதேஷ் குமார், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

 

விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கல்வியை மேம்படுத்துவதற்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 28 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

 

புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் 3 லட்சம் மாணவிகளுக்கு உதவித் தொகையாக ரூ.1,000 மாதந்தோறும் வழங்கப்படுகிறது. தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

 

இதுதவிர அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கும் தமிழ் புதல்வன் திட்டத்தின்கீழ் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்றவிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வியில் தொழில்முறை படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு திட்டமும் அமலில் உள்ளது. இத்தகைய திட்டங்களின் மூலம் இந்தியாவிலேயே தமிழகம் ஒரு முன்மாதிரி மாநிலமாகத் திகழ்கிறது.

 

பிரிட்டிஷ் தூதரகத்துடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ள இளம் தொழில் முறை திட்டத்தின் மூலம் இந்திய இளைஞர்கள் 2 ஆண்டுகளுக்குப் பிரிட்டனுக்குச் சென்று வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

by Kumar   on 28 Feb 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.