|
|||||
திருக்குறள் சொல்லி கட்டுமான பணி தொடங்கிய சட்டமன்ற உறுப்பினர் |
|||||
சட்டமன்ற உறுப்பினர் திருக்குறளை சொல்லச் சொல்ல அதை அரசு அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் கட்சியினர் என அனைத்து தரப்பினரம் திருப்பிச்சொல்ல புதிய நியாயவிலை கடைக்கு அடைக்கல் நாட்டிய சிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
********************************
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டை பகுதியில் நியாயவிலை கடை அடிக்கல்நாட்டுவிழா கடந்த 6.11.2023ம் தேதி நடைபெற்றது. இதில் காட்டுமன்னார்கோவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைசெல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.
*******************************
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
****************************
விழாவின் முத்தாய்ப்பாக சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இந்து மதத்தை சேர்ந்தவர்களும் குழுமியிருந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் திருக்குறள் ஒன்றை சொல்ல அதை அங்கு குழுமியிருந்த அரசு அலுவலர்கள் கட்சியினர் பொதுமக்கள் என அனைவரும் அவரை பின்தொடர்ந்து திருக்குறளை ஓத புதிய நியாயவிலை கடைக்கு அடிக்கல்நாட்டும் பூஜைகள் செய்யப்பட்டன.
***********************************
குறள் 972: "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்"
******************************
என்ற வள்ளுவனின் பிறப்பால் அனைவரும் சமம் செய்கிற தொழில் காட்டுகிற திறமைகளில் மட்டுமே வேறுபடுகிறோம் என்ற உன்னத கருத்தை வலியுறுத்தும் வகையில் அனைவருக்கும் முன்னுதாரனமாக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் தொடங்கிவைத்துள்ள இந்த செயல் அனைத்து தரப்பினரிடமும் சென்று சேர வேண்டும். அனைவரும் இதை கடைபிடித்தால் வள்ளுவனின் வார்த்தை பொய்க்காது என்பதற்கு சான்றாகும்.
சட்டமன்ற உறுப்பினர் திருக்குறளை சொல்லச் சொல்ல அதை அரசு அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் கட்சியினர் என அனைத்து தரப்பினரம் திருப்பிச்சொல்ல புதிய நியாயவிலை கடைக்கு அடைக்கல் நாட்டிய சிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டை பகுதியில் நியாயவிலை கடை அடிக்கல்நாட்டுவிழா கடந்த 6.11.2023ம் தேதி நடைபெற்றது. இதில் காட்டுமன்னார்கோவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைசெல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் விழாவின் முத்தாய்ப்பாக சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இந்து மதத்தை சேர்ந்தவர்களும் குழுமியிருந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் திருக்குறள் ஒன்றை சொல்ல அதை அங்கு குழுமியிருந்த அரசு அலுவலர்கள் கட்சியினர் பொதுமக்கள் என அனைவரும் அவரை பின்தொடர்ந்து திருக்குறளை ஓத புதிய நியாயவிலை கடைக்கு அடிக்கல்நாட்டும் பூஜைகள் செய்யப்பட்டன. குறள் 972: "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்" என்ற வள்ளுவனின் பிறப்பால் அனைவரும் சமம் செய்கிற தொழில் காட்டுகிற திறமைகளில் மட்டுமே வேறுபடுகிறோம் என்ற உன்னத கருத்தை வலியுறுத்தும் வகையில் அனைவருக்கும் முன்னுதாரனமாக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் தொடங்கிவைத்துள்ள இந்த செயல் அனைத்து தரப்பினரிடமும் சென்று சேர வேண்டும். அனைவரும் இதை கடைபிடித்தால் வள்ளுவனின் வார்த்தை பொய்க்காது என்பதற்கு சான்றாகும். |
|||||
by Kumar on 07 Nov 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|