LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

சூரிய மின்சக்தி மோட்டார்களை விவசாயிகள் அதிகம் நிறுவிட பிரதமர் மோடி வேண்டுகோள்!

விவசாய பண்ணைகளில் சூரிய மின்சக்தி மோட்டார்களை அதிக அளவு நிறுவ முன்வரவேண்டும் என்று பிரதமர் மோடி விவசாயி களை கேட்டுக்கொண்டு உள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற ` கிரிஷி கும்ப்’ என்ற நிகழ்ச்சியை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் டெல்லியில் இருந்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். அவர்களிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மோடி பேசியதாவது: 
உத்தரப்பிரதேச அரசு, உணவு தானியங்களை அதிக அளவு கொள்முதல் செய்ய தீவிர நடவடிக்கை எடுத்துள்ளதைப் பாராட்டுகிறேன். 

தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து உள்ளது கவலையைத் தருகிறது. எனவே விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்து அறுவடை செய்த பயிர்களின் மிச்சத்தை அகற்ற தீவைத்து எரிப்பதை தவிர்க்க வேண்டும். இதற்கு புதிய தொழில்நுட்பத்தை கண்டறிவது அவசியம். வரும் 2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக உயர்த்தும் மத்திய அரசின் முடிவுக்கு நீங்கள் ஆதரவு தரவேண்டும்.

பயிர்களை விளைவிப்பதற்குச் செலவிடும் தொகையைக் குறைத்து லாபம் அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக வரும் காலங்களில் சூரிய மின்சக்தியால் இயங்கும் மோட்டார்களை விவசாய பண்ணைகளில் அதிக அளவு நிறுவ விவசாயிகள் முன்வரவேண்டும். பசுமைப் புரட்சியைத் தொடர்ந்து தற்போது பால், தேன் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு உள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

by Mani Bharathi   on 28 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.