திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
நட்பு கொள்ள முடியாதவராய்த் தீயவைச் செய்கின்றவரிடத்திலும் பண்பு உடையவராய் நடக்க முடியாமை இழிவானதாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நண்பு ஆற்றாராகி நயம் இல செய்வார்க்கும் - தம்மொடு நட்பினைச் செய்யாது பகைமையைச் செய்தொழுவார் மாட்டும்; பண்பு ஆற்றாராதல் கடை - தாம் பண்புடையராய் ஒழுகாமை அறிவு உடையார்க்கு இழுக்காம். (நயம் - ஈரம். சிறப்பு உம்மை அவர் பண்பாற்றாமைக் கிடனாதல் தோன்ற நின்றது. அதனைச் செய்யின், தாமும் அவர் தன்மையராவர் என்பார், 'கடை' என்றார்.)
மணக்குடவர் உரை:
தம்மொடு நட்பினைச்செய்யாது பகைமையைச் செய்தொழுகுவார்மாட்டும் தாம் பண்புடையராய் ஒழுகாமை அறிவுடையார்க் கிழுக்காம்.
தேவநேயப் பாவாணர் உரை:
நண்பு ஆற்றாராகி நயம் இல செய்வார்க்கும் - தம்மொடு நட்புக்கொள்ளாது தமக்குத் தீமையே செய் தொழுகுவாரிடத்தும் ; பண்பு ஆற்றார் ஆதல் கடை -தாம் பண்புடையராயொழுகாமை அறிவுடையார்க்குக் கடைப்பட்ட குற்றமாம். தாமும் அவர் தன்மையராதலால் 'கடை ' என்றார். உம்மை இழிவு சிறப்பு.
கலைஞர் உரை:
நட்புக்கு ஏற்றவராக இல்லாமல் தீமைகளையே செய்து கொண்டிருப்பவரிடம், நாம் பொறுமை காட்டிப் பண்புடையவராக நடந்து கொள்ளாவிட்டால் அது இழிவான செயலாகக் கருதப்படும்.