LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக் வாள்வீச்சில் களமிறங்கும் தமிழக வீராங்கனை பவானி தேவி

இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக் வாள் வீச்சில் களமிறங்கும் தமிழக வீராங்கனை பவானி தேவி

வட சென்னையின் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சந்தலவதா ஆனந்த சுந்தரராமன் பவானிதேவி.இவர் இந்தியாவின் சார்பில் 2021-ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் வாள்வீச்சில் களம் இறங்குகிறார். ஒலிம்பிக் வாள்வீச்சுப் பிரிவில் களமிறங்கும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார் பவானி தேவி. 

இவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் வாழ்த்து கூறியுள்ளார்.அதில் ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள பவானி தேவியால் தமிழ் நாடே பெருமை கொள்கிறது. கடின உழைப்பினால் வென்று முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்று கூறியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  ஐந்து லட்சம்  நிதி உதவி வழங்கியுள்ளார்.

பவானி தேவி நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்.சென்னை முருகா தனுஷ்கோடி பள்ளியில் ஏதேனும் ஒரு விளையாட்டுப் பிரிவை தேர்ந்தெடுக்கச் சொன்னபோது வாள்வீச்சினை தெரிவு செய்துள்ளார். 2003 ஆம் ஆண்டு இவரது வாள்வீச்சு ஆரம்பமாகியுள்ளது. தனது 14 வது வயதில் சர்வதேச போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் ஒன்பது முறை தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 2009ஆம் ஆண்டில் நடந்த காமன்வெல்த் போட்டியில் நம் நாட்டிற்கு வெண்கலம் பெற்று தந்துள்ளார். இதனை தொடர்ந்து பல வெற்றிப் பதக்கங்களை இந்தியாவிற்கு பெற்று தந்துள்ளார் பவானி தேவி.

கேரளாவில் வாள் வீச்சு பயிற்சி பெற்று வந்த இவர், தற்போது இத்தாலியில் உள்ள நிக்கோலா ஜெனாட்டி என்பவரிடம் பயிற்சி பெற்று வருகின்றார்.
கடினமான காலங்களிலும் தன் முயற்சியை கைவிடாமல் இந்நிலையை எட்டியுள்ளார் பவானிதேவி. தோல்விகளுக்கு அடிபணியாமல் வெற்றியையே தன் குறிக்கோளாக வைத்து முன்னேறியுள்ள பவானிதேவி உண்மையில் தமிழ்நாட்டின் பெருமையாவார்.

by R.Gnanajothi   on 01 Jul 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.