தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு தொழிற் கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்துடன் இணைந்த, மகாத்மாகாந்தி சமுதாய கல்லூரி மூலமாக இந்த கல்விப்பணி நடைபெற்று வருகிறது. இந்த தொழிற்கல்வித் தேர்வில் 5 கைதிகள் அதிக மதிப்பெண்கள் வாங்கி தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தனர். அதில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற பேரறிவாளனும் அதில் ஒருவர். அருளானந்தம், சமையல்கலை டிப்ளமோ தேர்விலும், வீரபாரதி, கார் போன்ற 4 சக்கர வாகன மெக்கானிக் டிப்ளமோ தேர்விலும், வேலூர் சிறைக்கைதிகள் பேரறிவாளன், பவானிசிங் ஆகியோர் டி.டி.பி. டிப்ளமோ தேர்விலும், கடலூர் கன்னியப்பன் டி.எச்.இ. டிப்ளமோ தேர்விலும் தங்கப்பதக்கம் பெற்றுள்ளனர்
|