நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்பு ஆஜராக முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதிலளித்து பிரதமர் மன்மோகன் சிங் எழுதிள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: 2008ஆம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்தது தொடர்பான அனைத்து ஆவணங்களும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் (ஜே.பி.சி) ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் என் தரப்பிலோ, அரசுத் தரப்பிலோ மறைப்பதற்கு எதுவுமே இல்லை என்று தொடக்கம் முதலே நான் கூறி வருகிறேன். இந்த விவகாரத்தில் எத்தகைய ஆவணங்களைக் கோருவது, யாரை விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்பதை ஜே.பி.சி. உறுப்பினர்களும் அதன் தலைவரும் தான் பேசி முடிவு செய்யவேண்டும். பின்னர் ஜே.பி.சி. தலைவர்தான் ஜே.பி.சி. முன்பு ஆஜராகுமாறு முறைப்படி அழைப்பு விடுக்க வேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
|