LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

இலக்கியத்தில் முத்திரை பதித்தவர் கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை

 

தமிழக மக்களால் காந்திய கவிஞர் எனப் போற்றப்பட்ட ராமலிங்கம் பிள்ளை 1888-ம் ஆண்டு அக்டோபர் 19-ந் தேதி நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பிறந்தார். "தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!" "கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது," போன்ற தேசப்பக்தி பாடல்களை பாடிய இவர் தேசியத்தையும்,   காந்தியத்தையும் போற்றினார். 
*************************************
ஓவியர் சிறு வயதில் ராமலிங்கம் பிள்ளை படிப்பை விட ஓவியம் வரைவதில் வல்லவராக விளங்கினார். 1912-ம் ஆண்டு ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவையொட்டி   டெல்லியில் நடந்த ஓவிய கண்காட்சியில் ராமலிங்கம் பிள்ளை வரைந்த ஓவியம் இடம்பெற்று தங்கப்பதக்கம் பரிசு பெற்றது.
************************************
திருச்சி கல்லூரியில் பி.ஏ. படித்தார். படிப்பை விட இலக்கியத்தில் நாட்டம் கொண்ட ராமலிங்கம் பிள்ளை கிட்டப்பா நாடகங்களுக்கு பாட்டு எழுதிக்கொடுத்தார்.  காங்கிரஸ் கட்சியில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்தார். 1932-ல் நடந்த சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொண்டு ஒரு வருடம் சிறைத்தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு சிறைவாசம் அனுபவித்து வந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் உள்பட மற்ற தலைவர்களுக்கு கம்பராமாயணம், திருக்குறள் பாடங்களை நடத்தினார். திருக்குறளுக்கு புதிய உரை எழுதினார்.
****************************************
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம்
*********************************
புதுச்சேரியில் இருந்து தமிழகம் திரும்பிய பாரதியாரை காரைக்குடி அருகே கானாடு காத்தான் என்ற ஊரில் சந்தித்தார். அப்போது அருகில் இருந்தவர்கள் ராமலிங்கத்தை பாரதியாரிடம் இவர் பாடல்கள் எழுதுவார் என்று கூற, ஏதாவது நீர் இயற்றிய பாடலை கூறும் என்று பாரதியார் கேட்டுக்கொண்டார். உடனே ராமலிங்கம் கிட்டப்பாவின் லங்காதகனம் நாடகத்துக்கு எழுதிய 'தம்மரசை பிறர் ஆளவிட்டு விட்டுதான் வணங்கி கைகட்டி நின்ற பேரும்'. என்ற பாடலின் முதல் வரியை பாடிய உடனே' "பலே பாண்டியா!' பிள்ளை நீர் ஒரு புலவன் ஐயமில்லை'!' என்று தட்டிக்கொடுத்து பாராட்டினார் பாரதியார்.  ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு காங்கிரஸ் தொண்டர்கள் பாடுவதற்கென்றே' கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று  வருகுது' என்ற பாடலை எழுதித்தந்தார். அது காங்கிரஸ் தொண்டர்களிடையே வேதமந்திரமாக ஒலித்தது.  
**************************************
2 தடவை தமிழக மேல்சபை உறுப்பினராக இருந்திருக்கிறார். சாகித்ய அகாடமியின் நிர்வாகக்குழுவில் தமிழ் பிரதிநிதியாகவும் இடம்பெற்று இருக்கிறார். மலைக்கள்ளன் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை எழுதிய மலைக்கள்ளன் நாவல் திரைப்படமாக எடுக்கப்பட்டது. எம்.ஜி.ஆர்., பானுமதி நடித்து இருந்தனர்.  "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே 'என்ற இனிமையான பாடல் இடம்பெற்ற இந்தப்படம் எம்.ஜி.ஆருக்கு" "சூப்பர் ஹீரோ" அந்தஸ்தை பெற்றுத்தந்தது. இந்தப்படத்துக்கு கலைஞர் மு.கருணாநிதி திரைக்கதை அமைத்து வசனம் எழுதியிருந்தார். படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்று குடியரசுத்தலைவரின் விருது பெற்ற முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையும் பெற்றது.
******************************************* 
முதல் அரசவைக் கவிஞர்
****************************
ராமலிங்கம் பிள்ளை தன் சுயசரிதையை 'என் கதை' என்ற பெயரில் எழுதியுள்ளார். 40-க்கும் மேற்பட்ட நாவல்கள், கவிதை தொகுப்பு, நாடகங்கள் எழுதியிருக்கிறார். நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் படைப்புகள் தமிழக அரசால் 1998-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது.
************************************
இலக்கியத்தின் அனைத்துக் களங்களிலும் முத்திரை பதித்த இவர் மொத்தம் 66 நூல்களை எழுதியுள்ளார். நாடு விடுதலை அடைந்த பிறகு தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார். இவர் பத்மபூஷண் விருது பெற்றுள்ளார். சாகித்ய அகாடமியின் தமிழ்ப் பிரதிநிதியாக பொறுப்பு வகித்துள்ளார். தேசியக் கவிஞர், காந்தியக் கவிஞர், அரசவைக் கவிஞர் என்றெல்லாம் போற்றப்பட்டார்.
************************************
காந்தியடிகள் நினைவாக நினைவுத்தூண்  
***************************
1948-ம் ஆண்டு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நாகர்கோவிலில் காந்தியடிகள் நினைவாக நினைவுத்தூண் ஒன்று நிறுவினார். அதன் திறப்பு விழாவில் மாலை நடந்த நிகழ்ச்சிக்கு நாமக்கல் கவிஞரை தலைமை வகிக்கச்செய்து அவரது தலைமையில் பேரறிஞர் அண்ணா சொற்பொழிவு ஆற்றினார். அண்ணாவும், நாமக்கல் கவிஞரும் அன்றுதான் நேருக்குநேர் சந்தித்து பேசினர். அப்போது "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு"என்று அண்ணா நாமக்கல் கவிஞருக்கு புகழாரம் சூட்டினார். கவிஞரின் எழுத்தாற்றலை சிறப்பித்து பாராட்டி மகிழ்ந்தார்.
*************************************
தமது பாடல்களாலும், சொற்பொழிவுகளாலும், மக்கள் மனதில் நாட்டுப்பற்றை ஊட்டிய கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை 24-8-1972 அன்று காலமானார்.
**********************************
தமிழக அரசு, கவிஞர் வாழ்ந்த நாமக்கல் இல்லத்தை நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லம் ஆக்கி உள்ளது. சென்னை அரசு தலைமைச்செயலக 10 மாடி கட்டிடத்துதுக்கு இவரது பெயரை சூட்டி உள்ளது. நாமக்கல்லில் உள்ள அரசு மகளிர் கல்லூரிக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தமிழக மக்களால் காந்திய கவிஞர் எனப் போற்றப்பட்ட ராமலிங்கம் பிள்ளை 1888-ம் ஆண்டு அக்டோபர் 19-ந் தேதி நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பிறந்தார். "தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!" "கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது," போன்ற தேசப்பக்தி பாடல்களை பாடிய இவர் தேசியத்தையும்,   காந்தியத்தையும் போற்றினார்.

ஓவியர் சிறு வயதில் ராமலிங்கம் பிள்ளை படிப்பை விட ஓவியம் வரைவதில் வல்லவராக விளங்கினார். 1912-ம் ஆண்டு ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவையொட்டி   டெல்லியில் நடந்த ஓவிய கண்காட்சியில் ராமலிங்கம் பிள்ளை வரைந்த ஓவியம் இடம்பெற்று தங்கப்பதக்கம் பரிசு பெற்றது.

திருச்சி கல்லூரியில் பி.ஏ. படித்தார். படிப்பை விட இலக்கியத்தில் நாட்டம் கொண்ட ராமலிங்கம் பிள்ளை கிட்டப்பா நாடகங்களுக்கு பாட்டு எழுதிக்கொடுத்தார்.  காங்கிரஸ் கட்சியில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்தார். 1932-ல் நடந்த சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொண்டு ஒரு வருடம் சிறைத்தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு சிறைவாசம் அனுபவித்து வந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் உள்பட மற்ற தலைவர்களுக்கு கம்பராமாயணம், திருக்குறள் பாடங்களை நடத்தினார். திருக்குறளுக்கு புதிய உரை எழுதினார்.

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம்

புதுச்சேரியில் இருந்து தமிழகம் திரும்பிய பாரதியாரை காரைக்குடி அருகே கானாடு காத்தான் என்ற ஊரில் சந்தித்தார். அப்போது அருகில் இருந்தவர்கள் ராமலிங்கத்தை பாரதியாரிடம் இவர் பாடல்கள் எழுதுவார் என்று கூற, ஏதாவது நீர் இயற்றிய பாடலை கூறும் என்று பாரதியார் கேட்டுக்கொண்டார். உடனே ராமலிங்கம் கிட்டப்பாவின் லங்காதகனம் நாடகத்துக்கு எழுதிய 'தம்மரசை பிறர் ஆளவிட்டு விட்டுதான் வணங்கி கைகட்டி நின்ற பேரும்'. என்ற பாடலின் முதல் வரியை பாடிய உடனே' "பலே பாண்டியா!' பிள்ளை நீர் ஒரு புலவன் ஐயமில்லை'!' என்று தட்டிக்கொடுத்து பாராட்டினார் பாரதியார்.  ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு காங்கிரஸ் தொண்டர்கள் பாடுவதற்கென்றே' கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று  வருகுது' என்ற பாடலை எழுதித்தந்தார். அது காங்கிரஸ் தொண்டர்களிடையே வேதமந்திரமாக ஒலித்தது. 

2 தடவை தமிழக மேல்சபை உறுப்பினராக இருந்திருக்கிறார். சாகித்ய அகாடமியின் நிர்வாகக்குழுவில் தமிழ் பிரதிநிதியாகவும் இடம்பெற்று இருக்கிறார். மலைக்கள்ளன் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை எழுதிய மலைக்கள்ளன் நாவல் திரைப்படமாக எடுக்கப்பட்டது. எம்.ஜி.ஆர்., பானுமதி நடித்து இருந்தனர்.  "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே 'என்ற இனிமையான பாடல் இடம்பெற்ற இந்தப்படம் எம்.ஜி.ஆருக்கு" "சூப்பர் ஹீரோ" அந்தஸ்தை பெற்றுத்தந்தது. இந்தப்படத்துக்கு கலைஞர் மு.கருணாநிதி திரைக்கதை அமைத்து வசனம் எழுதியிருந்தார். படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்று குடியரசுத்தலைவரின் விருது பெற்ற முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையும் பெற்றது.

முதல் அரசவைக் கவிஞர்

ராமலிங்கம் பிள்ளை தன் சுயசரிதையை 'என் கதை' என்ற பெயரில் எழுதியுள்ளார். 40-க்கும் மேற்பட்ட நாவல்கள், கவிதை தொகுப்பு, நாடகங்கள் எழுதியிருக்கிறார். நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் படைப்புகள் தமிழக அரசால் 1998-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது.

இலக்கியத்தின் அனைத்துக் களங்களிலும் முத்திரை பதித்த இவர் மொத்தம் 66 நூல்களை எழுதியுள்ளார். நாடு விடுதலை அடைந்த பிறகு தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார். இவர் பத்மபூஷண் விருது பெற்றுள்ளார். சாகித்ய அகாடமியின் தமிழ்ப் பிரதிநிதியாக பொறுப்பு வகித்துள்ளார். தேசியக் கவிஞர், காந்தியக் கவிஞர், அரசவைக் கவிஞர் என்றெல்லாம் போற்றப்பட்டார்.

காந்தியடிகள் நினைவாக நினைவுத்தூண் 

1948-ம் ஆண்டு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நாகர்கோவிலில் காந்தியடிகள் நினைவாக நினைவுத்தூண் ஒன்று நிறுவினார். அதன் திறப்பு விழாவில் மாலை நடந்த நிகழ்ச்சிக்கு நாமக்கல் கவிஞரை தலைமை வகிக்கச்செய்து அவரது தலைமையில் பேரறிஞர் அண்ணா சொற்பொழிவு ஆற்றினார். அண்ணாவும், நாமக்கல் கவிஞரும் அன்றுதான் நேருக்குநேர் சந்தித்து பேசினர். அப்போது "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு"என்று அண்ணா நாமக்கல் கவிஞருக்கு புகழாரம் சூட்டினார். கவிஞரின் எழுத்தாற்றலை சிறப்பித்து பாராட்டி மகிழ்ந்தார்.

தமது பாடல்களாலும், சொற்பொழிவுகளாலும், மக்கள் மனதில் நாட்டுப்பற்றை ஊட்டிய கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை 24-8-1972 அன்று காலமானார்.

தமிழக அரசு, கவிஞர் வாழ்ந்த நாமக்கல் இல்லத்தை நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லம் ஆக்கி உள்ளது. சென்னை அரசு தலைமைச்செயலக 10 மாடி கட்டிடத்துதுக்கு இவரது பெயரை சூட்டி உள்ளது. நாமக்கல்லில் உள்ள அரசு மகளிர் கல்லூரிக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 

by Kumar   on 26 Oct 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.