|
|||||
தொடங்கிவிட்டது கோடை காலம் - அம்மை நோயிலிருந்து உங்களை பாதுகாத்து கொள்ள சில டிப்ஸ் ! |
|||||
கோடை காலம் பிறந்து விட்டது, வெயிலின் தாக்கம் அதிகரிக்கப் போகிறது, இதனால் பூமி வெப்பமடைவதை போல, நமது உடலின் வெப்ப நிலையம் அதிகரிக்கிறது. உடலின் வெப்பநிலையில் ஏற்படும் மாறுதல்களால் ஒரு சில நோய்கள் நம்மை தாக்குகின்றன. அவற்றில் முக்கியமானது, அம்மை நோய். இந்த அம்மை நோயிலிருந்து நமது உடலை பாதுகாக்க சில தகவல்களை பற்றி இங்கு காண்போம். அம்மை நோய் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. அம்மை நோய்களிலேயே மிக கொடிய நோய் பெரியம்மை நோயாகும், சித்த மருத்துவத்தில் பெரியம்மையை வைசூரி என்று அழைக்கப்பட இந்த நோய் பழங்காலங்களில் அதிக உயிர்களை பலி வாங்கியது, இதனை அடுத்து அரசும், மக்களும் மேற்கொண்ட பல நடவடிக்கைகளால் இந்த நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனாலும் சில வகையான அம்மை நோய்கள் இன்றளவும் கூட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தாக்கி பாதிப்புகளை உண்டாக்குகின்றன. அம்மை நோய்களில் இன்றளவும் இருக்க கூடிய வகைகள் பின்வருமாறு, சின்னம்மை (Chikenpox) தட்டம்மை (Measles) புட்டாலம்மை (mumps) உமியம்மை (Rubella) சின்னம்மை : சின்னம்மை வரிசெள்ள ஜோஸ்ட்ர் (Varicella zoster) என்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. இந்த நோய் எளிதில் தொற்றும் பண்புடையதாகும். குறிப்பாக பனிரெண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்நோய் எளிதில் தாக்கும். அறிகுறிகள் : * காய்ச்சல் மற்றும் கொப்புளங்கள் ஏற்படுவதுதான் இந்த நோயின் முக்கிய அறிகுறியாகும். * முதலில் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியிலும், தோலின் மேற்புறத்திலும் ஆங்காங்கே சிவந்தும் அவற்றின் மேல் கொப்புளங்களும் ஏற்படும். * ரோஜா இதழின் மேல் பனித்துளி இருப்பது போன்ற கொப்புளங்கள் ஏற்பட்டால் அது சின்னம்மைக்கு அடையாளமாக கொள்ளப் படுகிறது. கொப்புளம் பழுத்து, உடைந்தால் அதில் இருக்கும் நீர் வெளியாகி அதன் மேல் தோல் மட்டும் உடம்பில் புண்ணாக இருக்கும். சின்னம்மை வந்தால் செய்யக்கூடாதவை : * சின்னம்மை எளிதில் தொற்றும் தன்மை உடையது என்பதால், முற்றிலும் குணமடைந்து, அதன் அறிகுறிகள் மறையும் வரை, இந்நோய் ஏற்பட்ட குழந்தைகளை வெளியில் செல்ல அனுமதிக்கக் கூடாது. ஏனென்றால் இந்நோய் மற்றவர்களுக்கும் பரவும். * நோய்த்தொற்றுடைய நபருடன் தொடுதல், தொடர்பு கொண்டால் மட்டுமே, நோய் பரவும் என்றில்லை. நோய் தொற்றுடைய நபருக்கு தாம், நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிவதற்கு முன்னதாகவே அதாவது கொப்புளங்கள் உருவாவதற்கு முன்னதாகவே, அவரிடமிருந்து நோய் மற்றவர்களுக்குப் பரவத் தொடங்கிவிடும். கொப்புளங்கள் ஏற்படுவதற்கு ஐந்து நாட்கள் முன்பிருந்தே அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. * எல்லா கொப்புளங்களும் பக்காக மாறும் வரை அவர்கள் குழந்தைகளாக இருந்தால், பள்ளிக்கு அனுப்பக் கூடாது. குழந்தைகளை விட பெரியவர்களுக்குத்தான் இந்நோய் அதிக வலியையும், வேதனையையும், எரிச்சல், தூக்கமின்மை போன்றவற்றை உண்டாக்கும். * எல்லா கொப்புளங்களும் பெரிதாக மாறி, காய்ந்து உதிரும் வரை நோய் தொற்று காலம் தொடரும். இது ஏற்பட ஐந்திலிருந்து பத்து நாட்கள் வரை ஆகும். எனவே அந்த இடைப்பட்ட காலங்களில் கொப்புளங்களை உடைத்து விட கூடாது. பரவும் முறை : * தூய்மையற்ற சுவாசத்தின் சிறு துளிகளை மூச்சுடன் சேர்த்து உள்ளிழுக்கும்போது, மேற்புற சுவாசக்குழாயின் மென் சவ்வை வைரஸ் பாதிக்கிறது. தொடக்க நிலை நோய்த்தொற்று ஆரம்பித்து இரண்டிலிருந்து நான்கு நாட்களுக்குப் பிறகு மேற்புற சுவாசக்குழாயின் குறிப்பிட்ட பகுதியில் வைரஸ் சார்ந்த இனப்பெருக்கம் நடைபெறும். நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு உள்ள நான்கிலிருந்து ஆறு நாட்களில் இரத்தத்தில் நச்சுயிரி பெருக ஆரம்பிக்கும். பிறகு கல்லீரல், மண்ணீரல் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். உடலில் உள்ளுறுப்புகளைத் தாக்கும். அப்போது உடல் வலியும், காய்ச்சலும் ஏற்படும். * இரண்டு மூன்று நாட்களுக்குப்பின் நோயின் தாக்கம் உடலில் வெளிப்படையாக தெரிய ஆரம்பிக்கும். அதற்குப் பிறகு இரத்தத்தில் நச்சுயிரி மேலும் அதிகமாகப் பெருகும். இந்த உயர்நிலை இரத்த நச்சுயிரிப் பெருக்கம் என்பது இரத்த நுண் குழாய் அகவணிக்கலங்கள் மற்றும் மேல்தோல் ஆகியப் பகுதிகளில் தூண்டுதல் இல்லாமல் தானாகவே பரவும் வைரஸ் சார்ந்த பற்றுதல் ஆகும். தட்டம்மை : தட்டம்மை விரைவாகப் பரவும் ஒரு சுவாச நோய்த்தொற்று. இந்த நோயும் குழந்தைகளை அதிகமாக தாக்கும் தன்மை உடையது. அறிகுறிகள் : * உடல் முழுவதும் தோளில் வியர்க்குரு போன்று உண்டாகும். கண்களில் உறுத்தல் ஏற்பட்டு, எரிச்சல் உண்டாகும். மேலும் உடலிலும் எரிச்சல் ஏற்படும். * காய்ச்சல், இருமல், நீர் நிறைந்த சிவந்த கண்கள் மற்றும் ஜலதோஷம் போன்றவையும் ஏற்படும். * நீலம்-வெள்ளை நிற மையப் பகுதி கொண்ட சிறிய சிவப்பு நிற புள்ளிகள் போன்ற தோற்றம் வாயினுள் ஏற்படும். பரவும் முறை .: * விரைவாக பரவக்கூடிய இவ்வகை தட்டமை வைரஸ் இருமல், தும்மல், நோய்வாய்ப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்புகொள்ளும் போது, நோய்வாய்ப்பட்ட நபரின் மூக்கில் அல்லது தொண்டையில் வடியும் திரவம் நம் மேல் படும்போதும் பரவுகிறது. * இவ்வகை வைரஸ் காற்று மற்றும் தொற்று கண்ட பகுதியில் இரண்டு மணிநேரம் வரை வீரியத்துடன் காணப்படும். * தட்டம்மை நோய் தொற்று கண்ட நபர் உடலில் தொற்று ஏற்படுவதற்கு நான்கு தினங்களுக்கு முன்பாகவும், மற்றும் தொற்று ஏற்பட்ட பின் நான்கு தினங்களுக்கும் அந்நபரிலிருந்து நோய் பரவுகிறது. புட்டாளம்மை : குழந்தைகளுக்கு ஏற்படும் அம்மைகளில் இதுவும் ஒன்றாகும். உமிழ்நீர் சுரப்பிகளில் ஒன்றாகிய பேரோடிட் சுரப்பியில் (Parotid glands) ஏற்படுகிற நோயாகும். அறிகுறி : * காதின் கீழ்ப் பகுதியில் வீக்கம் ஏற்படும். * ஆரம்பத்தில் 100 டிகிரி வரை காய்ச்சல் இருக்கும். வாயைத் திறக்க முடியாமல் வலி இருக்கும். உணவு, தண்ணீர் உட்கொள்ளும்போது வலி இருக்கும். மருந்து : * வேப்பங் கொழுந்தையும், மஞ்சளையும் சரிசமமாக எடுத்து அரைத்து வெளிப்பூசுதல் சிறந்த பலனைத் தரும். உமியம்மை : குழந்தைகளை பெரும்பாலும் தாக்கும் இந்த அம்மை நோய் ரூபெல்லா என்ற வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. அறிகுறி : * இந்த நோயின் முக்கிய அறிகுறி காய்ச்சல் ஏற்பட்டு, சில நேரங்களில் வாந்தியும் பேதியும் உண்டாகும். * மூன்றாம் நாள் முகத்தில் சிறு நமைச்சல் இருக்கும். பிறகு உடலெங்கும் உமியைப் போல் கொப்புளங்கள் வர ஆரம்பிக்கும். ஐந்தாம் நாள் நீர்க்கோர்த்த கொப்புளங்களாக மாறும். பின் சிறிது சிறிதாக ஒன்பதாவது நாளில் மறைந்துவிடும். அம்மை நோய் வந்தால் கடைபிடிக்க வேண்டியவை : * முதலில் அம்மை நோய்க்கான அறிகுறிகள் தென்பட்ட உடன் மருத்துவரை அணுகி அவர் கூறும் ஆலோசனைகளை கடைபிடிக்க வேண்டும். * நோய் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க நோய்வாய்ப்பட்ட நபரை தனி படுக்கையில் படுக்க வைக்க வேண்டும். அவருடைய உபயோகப் பொருட்களை மற்றவர்கள் உபயோகப்படுத்தக் கூடாது. * காய்ச்சி வடிகட்டிய தண்ணீரையே குடிக்க வேண்டும். * திட உணவை குறைத்து திரவ உணவு உட்கொள்வது சிறந்தது. இளநீர் உபயோகிக்கலாம். * கொப்புளங்கள் அனைத்தும் காய்ந்தபின் குளிப்பாட்ட வேண்டும். அதுவரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் ஓய்வெடுக்க விட வேண்டும். பெரியவர்களுக்கும் இது பொருந்தும். * குழந்தை பிறந்த உடன் 9 வது மற்றும் 12 வது மாதத்தில் போடவேண்டிய அம்மை தடுப்பூசிகளை போட வேண்டும். அம்மை நோய் வராமல் காக்கும் தடுப்பு முறைகள் : * கோடை காலம் ஆரம்பித்த உடன் மாதத்திற்கு ஒரு முறையாவது, 10 கிராம் வேப்பங்கொழுந்தும் 10 கிராம் விரலி மஞ்சளும் சிறிது உப்பும் சேர்த்து அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டி குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் சாப்பிடக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, உடலும் வலு பெரும். * உடலில் வெயிலின் தாக்கத்தை குறைக்க இளநீர், பழ சாறுகள், நுங்கு போன்றவற்றை பருகலாம் |
|||||
by Swathi on 24 Apr 2013 2 Comments | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|