LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.

கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில் தொடருவதால் 27/03/2024 முதல் 4 நாட்களுக்கு 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் வழக்கமாக ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் தான் கோடை வெயில் கடுமையாக இருக்கும். ஆனால் இந்த வருடம் 2 மாதங்களுக்கு முன்பே பிப்ரவரி மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்தது.

 

பல்வேறு பகுதிகளில் பல நாட்களில் வழக்கத்தை விட 4 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை அதிகமாகக் காணப்பட்டது. குறிப்பாக பாலக்காடு, கண்ணூர், புனலூர் உள்படப் பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 

இதன் காரணமாக கேரளாவில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறந்த வெளியில் தொழிலாளர்கள் வேலை பார்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சமயத்தில் பொதுமக்கள் அதிக நேரம் நேரடியாக உடலில் வெயில் படும் வகையில் நடமாட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

 

இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரம், பத்தனம்திட்டா உள்பட சில பகுதிகளில் மழை பெய்தது.ஆனால் அதன் பிறகும் வெப்பநிலை குறையவில்லை.

 

திருச்சூர் மாவட்டம் வெள்ளாணிக்கரை பகுதியில் அதிகபட்சமாக 39.9 டிகிரி செல்ஷியஸ் (103.8 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவானது. பாலக்காடு மற்றும் புனலூரில் 39 டிகிரி செல்ஷியசும், கண்ணூர் விமானநிலையத்தில் 37.2 டிகிரி செல்ஷியசும், கோழிக்கோட்டில் 37 டிகிரி செல்ஷியசும் வெப்பநிலை காணப்பட்டது. இந்தநிலையில் இன்று முதல் வரும் 29ம் தேதி வரை பாலக்காடு, எர்ணாகுளம், ஆலப்புழா, கோட்டயம் உள்பட 11 மாவட்டங்களில் வழக்கத்தை விட வெப்பநிலை 4 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

by Kumar   on 28 Mar 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.