LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழ்நாட்டுக்காக உயிர் நீத்த சங்கரலிங்கனார்

 

விருதுநகர் மாவட்டம் மண்மலைமேடு என்ற கிராமத்தில் 1895-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி பிறந்தார். தந்தை பெயர் கருப்பசாமி. தாயார் வள்ளியம்மை. விருதுநகரில்பெருந்தலைவர் காமராஜர் படித்த பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று பல முறை சிறைத்தண்டனை அனுபவித்தார்.
**********************************
மெட்ராஸ் மாகாணத்தில் ஆந்திராவின் பெரும்பகுதியும், கர்நாடகாவின் பெல்லாரி போன்ற பகுதிகளும், கேரளாவின் மலபார் போன்ற பகுதியும் இணைந்து இருந்தன. சென்னையைச்சேர்ந்த தெலுங்கை தாய்மொழியாக கொண்ட பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் 1952-ம் ஆண்டு ஆந்திராவை சென்னையில் இருந்து தெலுங்கர்கள் வாழும் தனி மாநிலமாக பிரித்து தரக்கோரி 56 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்டார். அவரது போராட்டம் காரணமாக எழுந்த எழுச்சியால் ஆந்திர மாநிலம் உருவானது.
****************************************
சங்கரலிங்கனாருக்கு தூண்டுதலை ஏற்படுத்தியது
****************************************
1956-ம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. பின்னர் கர்நாடகா, கேரளா போன்றவை மொழிவாரி மாநிலங்களாக உருவானது. மிச்சம் மீதி இருந்த பகுதி மெட்ராஸ் மாகாணமாக தொடர்ந்தது. தமிழ்நாட்டை விட்டு மலையாளிகள், ஆந்திரர்கள், கன்னடர்கள் பிரிந்து போன பிறகும் கூட தமிழ்நாடு என்ற பெயரை வைக்க மறுப்பதை ஏற்க முடியாது.
**************************************** 
இனி தமிழர்கள் பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் தமிழ்நாடு என்று எழுத வேண்டும் என்றார் தந்தை பெரியார். தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சி, தமிழரசு கழகம் உள்ளிட்ட கட்சிகளும் இதை வலியுறுத்தின. காங்கிரசில் இருந்த சிலருக்கும் இந்த எண்ணம் இருந்தது.
*************************************
உண்ணாவிரதத்தை கைவிட மறுத்துவிட்டார்
******************************************
பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்டது காங்கிரசைச் சேர்ந்த சங்கரலிங்கனாருக்கு தூண்டுதலை ஏற்படுத்தியது. தமிழர்களின் நிலப்பரப்பை தமிழ்நாடு  என மாற்றக்கோரி 1956 ஜூலை மாதம் 27-ந்தேதி விருதுநகர் சூலக்கரைமேட்டில் தனிநபராக உண்ணாவிரதம் தொடங்கினார். அந்த இடம் ஆள் நடமாட்டம் இல்லாத இடமாக இருந்தது. பாதுகாப்பு கருதி வேறு இடத்தில் உண்ணாவிரதத்தை தொடர வேண்டும் என்று பொதுவுடைமை கட்சியினர் விடுத்தவேண்டுகோளை ஏற்று விருதுநகர் தேசப்பந்து மைதானத்தில் உண்ணாவிரதம் தொடங்கினார். சங்கரலிங்கனாருக்கு கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் பாதுகாப்பாக இருந்தனர்.
**********************************************
  60 நாட்கள் கடந்ததும், சங்கரலிங்கனாரின் உடல்நிலை பின்னடைவை சந்தித்தது. ம.பொ.சி., காமராஜர், அண்ணா, ஜீவா, ஆகியோர் விருதுநகருக்கு சென்று சங்கரலிங்கனாரை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். அதற்கு அவர் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்துவிட்டார்.
*********************************************
சங்கரலிங்கனார் எழுதிய இறுதிக் கடிதம்
*************************************************
64-வது நாளின் போது பத்திகைக்கு அவர் எழுதிய கடிதத்தில், "காங்கிரஸ் ஆட்சியின் கொடுமை கடுமையாகி விட்டது . காந்தியம் மடிந்து கொண்டு வருகிறது. துரோகிகள் ஆட்சியில் உயிரோடு வாழ மனமில்லை. காங்கிரஸ் - காந்தியத்திற்காக உழைத்தும் , அவர்கள் என் உண்ணாவிரதத்தில் கூட உதவி செய்யத் தவறிவிட்டார்கள். கம்யூனிஸ்டு கட்சி உதவி செய்கிறது . வெற்றி கிடைத்தால் வாழ்கிறேன் அல்லது சாகிறேன்.பட்டினியாலும் பல்வேறு பசியாலும் வாடும் ஏழை மக்கள் என் மனக்கண் தோன்றி கண்ணீர் வடிக்கின்றனர். இது வீண் போகாது. இன்று முதல் அசதி அதிகம், பேச சக்தி குறைவு, கூடிய சீக்கிரம் சாவு ஏற்படும், பூ வேண்டாம், பூ மாலை வேண்டாம், கெளபீனம் கட்டுவது போதும், பாடையில் குளிர்ந்த நேரம் எடுத்துச் செல்லுங்கள், காந்தி தங்கிய ஆத்துக்கரை மண் மெட்டில், நான் தங்கியிருந்த இடத்துக்கு முன்னால் இரண்டு வேப்ப மரத்துக்கு அடியில் குழியில் போடுங்கள். அந்த இடத்தில் என் சடலத்தை அடக்கம் செய்ய சர்க்கார் மறுத்தால் திரு.வெ.நா.பு.ராமசாமி நாடார் அவர்கள் நந்தவனத்துக்கு முன்பு குண்டும் குழியுமாக உள்ள இடத்தின் மத்தியில் மேடையில் அடக்கம் செய்யுங்கள். எல்லோரும் வணக்கம், வந்தே மாதரம்.
                                                                                                                      ஆண்டவன் ஆத்மன்,
                                                                                                                  க.பெ.சங்கரலிங்க நாடார்
*****************************************************************
76 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்ட அந்த புனிதரின் உயிர்ப்பறவை 1956-ம் ஆண்டு அக்டோபர் 13-ந்தேதி அவர் நெஞ்சக்கூட்டில் இருந்து பறந்து சென்றது. காங்கிரஸ் கட்சிக்காரர் என்றாலும் தன் கோரிக்கையை ஏற்காத காங்கிரஸ் கட்சியை நம்பாமல் தான் மரணம் அடைந்தவுடன் உடலை அடக்கம் செய்யும் பொறுப்பை கம்யூனிஸ்டு கட்சியினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சங்கரலிங்கனார் கூறியிருந்தார்.
************************************
அதன்படி அவரது உடல் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மதுரை தத்தனேரி சுடுகாட்டில் உடல் தகனம் செய்யப்பட்டது. சங்கரலிங்கனார் மறைவு செய்தி தமிழக அரசியலில் அதிர்ச்சியையும் சலசலப்பையும் உண்டாக்கியது. கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
***********************************
 தமிழ்நாடு பெயர் மாற்றம்  நிறைவேற்றப்பட்டது
**************************************
சங்கரலிங்கனாரின் கோரிக்கைக்கு அவருடைய மறைவுக்கு பின் அழுத்தம் கொடுக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் தனி மசோதா கொண்டு வரப்பட்ட போதும், மாநில சட்டசபையில் தமிழ்நாடு பெயர் சூட்டி தீர்மானம் கொண்டு வரப்பட்ட போதும் முடிவு எதுவும் கிடைக்கவில்லை.
***********************************
1967-ம் ஆண்டு அறிஞர் அண்ணா முதல்-அமைச்சரானதும், 1968 ஜூலை 18-ந் தேதி தமிழ்நாடு பெயர் மாற்றம் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பேரவை தலைவர் சி.பா.ஆதித்தனார் அனுமதியுடன் அண்ணா, 'தமிழ்நாடு' என மூன்று முறை கூற ''வாழ்க'' என்று உறுப்பினர்கள் விண்ணதிர முழக்கமிட்டார்கள்.
***************************************
மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது
***********************************************
1968 நவம்பர் மாதம் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது. 1968 டிசம்பர் 1-ந்தேதி தமிழ்நாடு பெயர் மாற்றம் விழாவாக கொண்டாடப்பட்டது.
****************************************
1969 ஜனவரி 14-ந்தேதி பொங்கல் முதல் அதிகாரபூர்வமாக மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடு ஆனது. சங்கரலிங்கனாரின் தியாகத்தை அறிஞர் அண்ணா உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் போற்றினர். சங்கரலிங்கனாரின் நினைவை போற்றும் வகையில் தமிழக அரசால் விருதுநகர் கல்லூரி சாலையில் நகராட்சி பூங்கா அருகில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் மண்மலைமேடு என்ற கிராமத்தில் 1895-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி பிறந்தார். தந்தை பெயர் கருப்பசாமி. தாயார் வள்ளியம்மை. விருதுநகரில்பெருந்தலைவர் காமராஜர் படித்த பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று பல முறை சிறைத்தண்டனை அனுபவித்தார்.

மெட்ராஸ் மாகாணத்தில் ஆந்திராவின் பெரும்பகுதியும், கர்நாடகாவின் பெல்லாரி போன்ற பகுதிகளும், கேரளாவின் மலபார் போன்ற பகுதியும் இணைந்து இருந்தன. சென்னையைச்சேர்ந்த தெலுங்கை தாய்மொழியாக கொண்ட பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் 1952-ம் ஆண்டு ஆந்திராவை சென்னையில் இருந்து தெலுங்கர்கள் வாழும் தனி மாநிலமாக பிரித்து தரக்கோரி 56 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்டார். அவரது போராட்டம் காரணமாக எழுந்த எழுச்சியால் ஆந்திர மாநிலம் உருவானது.

சங்கரலிங்கனாருக்கு தூண்டுதலை ஏற்படுத்தியது

1956-ம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. பின்னர் கர்நாடகா, கேரளா போன்றவை மொழிவாரி மாநிலங்களாக உருவானது. மிச்சம் மீதி இருந்த பகுதி மெட்ராஸ் மாகாணமாக தொடர்ந்தது. தமிழ்நாட்டை விட்டு மலையாளிகள், ஆந்திரர்கள், கன்னடர்கள் பிரிந்து போன பிறகும் கூட தமிழ்நாடு என்ற பெயரை வைக்க மறுப்பதை ஏற்க முடியாது.

இனி தமிழர்கள் பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் தமிழ்நாடு என்று எழுத வேண்டும் என்றார் தந்தை பெரியார். தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சி, தமிழரசு கழகம் உள்ளிட்ட கட்சிகளும் இதை வலியுறுத்தின. காங்கிரசில் இருந்த சிலருக்கும் இந்த எண்ணம் இருந்தது.

உண்ணாவிரதத்தை கைவிட மறுத்துவிட்டார்

பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்டது காங்கிரசைச் சேர்ந்த சங்கரலிங்கனாருக்கு தூண்டுதலை ஏற்படுத்தியது. தமிழர்களின் நிலப்பரப்பை தமிழ்நாடு  என மாற்றக்கோரி 1956 ஜூலை மாதம் 27-ந்தேதி விருதுநகர் சூலக்கரைமேட்டில் தனிநபராக உண்ணாவிரதம் தொடங்கினார். அந்த இடம் ஆள் நடமாட்டம் இல்லாத இடமாக இருந்தது. பாதுகாப்பு கருதி வேறு இடத்தில் உண்ணாவிரதத்தை தொடர வேண்டும் என்று பொதுவுடைமை கட்சியினர் விடுத்தவேண்டுகோளை ஏற்று விருதுநகர் தேசப்பந்து மைதானத்தில் உண்ணாவிரதம் தொடங்கினார். சங்கரலிங்கனாருக்கு கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் பாதுகாப்பாக இருந்தனர்.

60 நாட்கள் கடந்ததும், சங்கரலிங்கனாரின் உடல்நிலை பின்னடைவை சந்தித்தது. ம.பொ.சி., காமராஜர், அண்ணா, ஜீவா, ஆகியோர் விருதுநகருக்கு சென்று சங்கரலிங்கனாரை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். அதற்கு அவர் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்துவிட்டார்.

சங்கரலிங்கனார் எழுதிய இறுதிக் கடிதம்

64-வது நாளின் போது பத்திகைக்கு அவர் எழுதிய கடிதத்தில், "காங்கிரஸ் ஆட்சியின் கொடுமை கடுமையாகி விட்டது . காந்தியம் மடிந்து கொண்டு வருகிறது. துரோகிகள் ஆட்சியில் உயிரோடு வாழ மனமில்லை. காங்கிரஸ் - காந்தியத்திற்காக உழைத்தும் , அவர்கள் என் உண்ணாவிரதத்தில் கூட உதவி செய்யத் தவறிவிட்டார்கள். கம்யூனிஸ்டு கட்சி உதவி செய்கிறது . வெற்றி கிடைத்தால் வாழ்கிறேன் அல்லது சாகிறேன்.பட்டினியாலும் பல்வேறு பசியாலும் வாடும் ஏழை மக்கள் என் மனக்கண் தோன்றி கண்ணீர் வடிக்கின்றனர். இது வீண் போகாது. இன்று முதல் அசதி அதிகம், பேச சக்தி குறைவு, கூடிய சீக்கிரம் சாவு ஏற்படும், பூ வேண்டாம், பூ மாலை வேண்டாம், கெளபீனம் கட்டுவது போதும், பாடையில் குளிர்ந்த நேரம் எடுத்துச் செல்லுங்கள், காந்தி தங்கிய ஆத்துக்கரை மண் மெட்டில், நான் தங்கியிருந்த இடத்துக்கு முன்னால் இரண்டு வேப்ப மரத்துக்கு அடியில் குழியில் போடுங்கள். அந்த இடத்தில் என் சடலத்தை அடக்கம் செய்ய சர்க்கார் மறுத்தால் திரு.வெ.நா.பு.ராமசாமி நாடார் அவர்கள் நந்தவனத்துக்கு முன்பு குண்டும் குழியுமாக உள்ள இடத்தின் மத்தியில் மேடையில் அடக்கம் செய்யுங்கள். எல்லோரும் வணக்கம், வந்தே மாதரம்"                                                                                                                                                                              ஆண்டவன் ஆத்மன்,                                                                                                                                                    க.பெ.சங்கரலிங்க நாடார்

76 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்ட அந்த புனிதரின் உயிர்ப்பறவை 1956-ம் ஆண்டு அக்டோபர் 13-ந்தேதி அவர் நெஞ்சக்கூட்டில் இருந்து பறந்து சென்றது. காங்கிரஸ் கட்சிக்காரர் என்றாலும் தன் கோரிக்கையை ஏற்காத காங்கிரஸ் கட்சியை நம்பாமல் தான் மரணம் அடைந்தவுடன் உடலை அடக்கம் செய்யும் பொறுப்பை கம்யூனிஸ்டு கட்சியினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சங்கரலிங்கனார் கூறியிருந்தார்.

அதன்படி அவரது உடல் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மதுரை தத்தனேரி சுடுகாட்டில் உடல் தகனம் செய்யப்பட்டது. சங்கரலிங்கனார் மறைவு செய்தி தமிழக அரசியலில் அதிர்ச்சியையும் சலசலப்பையும் உண்டாக்கியது. கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

தமிழ்நாடு பெயர் மாற்றம்  நிறைவேற்றப்பட்டது

சங்கரலிங்கனாரின் கோரிக்கைக்கு அவருடைய மறைவுக்கு பின் அழுத்தம் கொடுக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் தனி மசோதா கொண்டு வரப்பட்ட போதும், மாநில சட்டசபையில் தமிழ்நாடு பெயர் சூட்டி தீர்மானம் கொண்டு வரப்பட்ட போதும் முடிவு எதுவும் கிடைக்கவில்லை.

1967-ம் ஆண்டு அறிஞர் அண்ணா முதல்-அமைச்சரானதும், 1968 ஜூலை 18-ந் தேதி தமிழ்நாடு பெயர் மாற்றம் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பேரவை தலைவர் சி.பா.ஆதித்தனார் அனுமதியுடன் அண்ணா, 'தமிழ்நாடு' என மூன்று முறை கூற ''வாழ்க'' என்று உறுப்பினர்கள் விண்ணதிர முழக்கமிட்டார்கள்.

மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது

1968 நவம்பர் மாதம் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது. 1968 டிசம்பர் 1-ந்தேதி தமிழ்நாடு பெயர் மாற்றம் விழாவாக கொண்டாடப்பட்டது.

1969 ஜனவரி 14-ந்தேதி பொங்கல் முதல் அதிகாரபூர்வமாக மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடு ஆனது. சங்கரலிங்கனாரின் தியாகத்தை அறிஞர் அண்ணா உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் போற்றினர். சங்கரலிங்கனாரின் நினைவை போற்றும் வகையில் தமிழக அரசால் விருதுநகர் கல்லூரி சாலையில் நகராட்சி பூங்கா அருகில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

 

by Kumar   on 14 Oct 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.