|
|||||
தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தனி ஆணையம்: இலங்கை அரசு முடிவு |
|||||
இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழர்களுடன் நல்லுறவை ஏற்படுத்தி, தேச ஒற்றுமையை வலுப்படுத்த தனி ஆணையம் அமைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
*****************************
இதுதொடர்பாக அந்நாட்டு அதிபர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உள்நாட்டுப் போருக்குப் பிறகு தேச ஒற்றுமையை வலுப்படுத்த தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அரசியல் சீர்திருத்தங்கள், நீதிமன்றங்கள் மற்றும் இதர நடவடிக்கைகள் மூலம், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக எதிர்வினையாற்றி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்ற வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை நோக்கி, தனி ஆணையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான அந்த ஆணையம், நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு விரைவில் உருவாக்கப்படும். இதுதொடர்பாக அனைத்துத் தரப்பினரிடமும் கருத்து கோரப்படும்.
*****************************
உள்நாட்டுப் போர், 2009-இல் முடிவுக்கு வந்தது
***********************************************
இந்தத் தனி ஆணையம் என்பது போரால் ஏற்பட்ட வேதனையில் இருந்து தனிநபர்கள் மற்றும் சமூகங்கள் விடுபடும் வகையில், உண்மையைத் தெரிந்துகொள்ள மறுக்க முடியாத உரிமையை இலங்கையைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போருக்குப் பிறகு முந்தைய காலங்களில் அமைக்கப்பட்ட ஆணையங்களின் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாகவும் இந்தத் தனி ஆணையம் மறு ஆய்வு செய்து பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
********************************
இலங்கையில் சுமார் 30 ஆண்டுகளாக நடைபெற்று வந்த உள்நாட்டுப் போர், 2009-இல் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழர்களுடன் நல்லுறவை ஏற்படுத்தி, தேச ஒற்றுமையை வலுப்படுத்த தனி ஆணையம் அமைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு அதிபர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உள்நாட்டுப் போருக்குப் பிறகு தேச ஒற்றுமையை வலுப்படுத்த தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அரசியல் சீர்திருத்தங்கள், நீதிமன்றங்கள் மற்றும் இதர நடவடிக்கைகள் மூலம், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக எதிர்வினையாற்றி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்ற வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை நோக்கி, தனி ஆணையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான அந்த ஆணையம், நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு விரைவில் உருவாக்கப்படும். இதுதொடர்பாக அனைத்துத் தரப்பினரிடமும் கருத்து கோரப்படும். உள்நாட்டுப் போர், 2009-இல் முடிவுக்கு வந்தது இந்தத் தனி ஆணையம் என்பது போரால் ஏற்பட்ட வேதனையில் இருந்து தனிநபர்கள் மற்றும் சமூகங்கள் விடுபடும் வகையில், உண்மையைத் தெரிந்துகொள்ள மறுக்க முடியாத உரிமையை இலங்கையைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போருக்குப் பிறகு முந்தைய காலங்களில் அமைக்கப்பட்ட ஆணையங்களின் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாகவும் இந்தத் தனி ஆணையம் மறு ஆய்வு செய்து பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் சுமார் 30 ஆண்டுகளாக நடைபெற்று வந்த உள்நாட்டுப் போர், 2009-இல் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
|
|||||
by Kumar on 10 Dec 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|