|
|||||
தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு |
|||||
தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதி சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகிறது. குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயர சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளை தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது. தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களை காப்போரின் தியாகத்தினை போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
****************************************
தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (NOTTO) வழங்கும் சிறந்த மாநில உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்புக்கான (SOTTO) விருதை தமிழ்நாடு சமீபத்தில் வென்றுள்ளது.
**********************************
2008-ல் உறுப்பு மாற்று திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, தமிழ்நாடு மாநிலத்தில் 1,706 நன்கொடையாளர்கள் வாயிலாக மொத்தம் 786 இதயங்கள், 801 நுரையீரல், 1566 கல்லீரல், 3047 சிறுநீரகங்கள், 37 கணையம், ஆறு சிறுகுடல்கள், இரண்டு வயிறுகள் மற்றும் நான்கு கைகள் மாற்றப்பட்டுள்ளன. தற்போது தமிழகத்தில் 40 அரசு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
**********************************************
உடல் உறுப்பு தானம் என்றால் என்ன
****************************************
உடல் உறுப்பு தானம்' என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும்
************************
எத்தனை வகைகளில் உறுப்பு தானம் செய்ய முடியும்
**********************
உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முதலாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இரண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது.
****************************
உயிருடன் இருக்கும் போது.....
**************************
ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.
*************************
இறந்த பின்னர்
*************************
இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், சுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா).
*********************
யார் யார் உடல் உறுப்புக்களை தானமாக தரமுடியும்
*******************
நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெபடைடீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாதவர்கள் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.
********************
உடல் உறுப்பு தானம் செய்ய வயது
*********************
18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி தாமாக முன் வந்து தானம் செய்யலாம்.
தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதி சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகிறது. குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயர சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளை தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது. தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களை காப்போரின் தியாகத்தினை போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (NOTTO) வழங்கும் சிறந்த மாநில உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்புக்கான (SOTTO) விருதை தமிழ்நாடு சமீபத்தில் வென்றுள்ளது. 2008-ல் உறுப்பு மாற்று திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, தமிழ்நாடு மாநிலத்தில் 1,706 நன்கொடையாளர்கள் வாயிலாக மொத்தம் 786 இதயங்கள், 801 நுரையீரல், 1566 கல்லீரல், 3047 சிறுநீரகங்கள், 37 கணையம், ஆறு சிறுகுடல்கள், இரண்டு வயிறுகள் மற்றும் நான்கு கைகள் மாற்றப்பட்டுள்ளன. தற்போது தமிழகத்தில் 40 அரசு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உடல் உறுப்பு தானம்' என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும் எத்தனை வகைகளில் உறுப்பு தானம் செய்ய முடியும் உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முதலாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இரண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது.
ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை. இறந்த பின்னர் இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், சுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா). யார் யார் உடல் உறுப்புக்களை தானமாக தரமுடியும் நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெபடைடீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாதவர்கள் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள். உடல் உறுப்பு தானம் செய்ய வயது 18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி தாமாக முன் வந்து தானம் செய்யலாம்.
|
|||||
by on 25 Sep 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|