தூத்துக்குடி சிப்காட்: இங்குள்ள தாமிரா நிகேதன் பகுதியில் தினமும் மாலை 5 மணிக்கு சுமார், 5,000 முதல் 6,000 வரையிலான வண்ண வண்ணமான வெளிநாட்டுப் பறவைகள் வருகின்றன. இரவு தங்குகின்றன. அதிகாலை 4 மணிக்கு சென்று விடுகின்றன. இந்த பறவைககள் அனைத்தும் ஐரோப்பா, ஆசிய நாடுகள், நேபாளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவை இவற்றில் இளம் சிவப்பு வண்ண சிறகுகள் ஆரஞ்ச் கலரில் அலகையும் கொண்டுள்ள ரோசிஸ்டார்லிங் என்ற ஐரோப்பா நாட்டு பறவைகள் மற்றும் . இதேபோல உடலமைப்பு கொண்ட பிராமினி ஸ்டார்லிங் மற்றும் ஏசியன் பேரடைஸ் பிளைகேட்சர் பறவைகள், ரூபிசன் டிரிபை, டெய்லர்பேர்டு, சன்பேர்டு போன்ற வகை பறவைகளும் எதிரெதிரே அமர்ந்து கொண்டு தங்களது செய்திகளைப் பரிமாறிக் கொள்கின்றன. இதைத்தான் பார்த்தாலே பரவசம் என்கிறார்களோ?.
|