|
|||||
தானேயில் அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 30 பேர் பலி ! 32 க்கும் மேற்பட்டோர் படுகாயம் ! |
|||||
மகாராஷ்டிர மாநிலம் தானேயில் உள்ள ஷில் பாட்டா பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 25 பேர் பலியாயினர், 55-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் நகரின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தானேயின் ஷில் பாட்டா பகுதியில் உள்ள அந்தக்கட்டடத்தின் நான்கு தளங்களில் மக்கள் குடியிருந்து
வருகின்றனர்.சம்பவம் நடந்த போது 35-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அந்தக்கட்டடத்தில் இருந்துள்ளனர். மீட்பு பணியில் 12 தீயணைப்புக்குழுவினரும், 24-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களும்
ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த அடுக்கு மாடி குடியிருப்பு சட்ட விரோதமாக வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டட இடிபாடுகளில் மீட்கும் பணி
தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலம் தானேயில் உள்ள ஷில் பாட்டா பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 25 பேர் பலியாயினர், 55-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் நகரின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தானேயின் ஷில் பாட்டா பகுதியில் உள்ள அந்தக்கட்டடத்தின் நான்கு தளங்களில் மக்கள் குடியிருந்து வருகின்றனர்.சம்பவம் நடந்த போது 35-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அந்தக்கட்டடத்தில் இருந்துள்ளனர். மீட்பு பணியில் 12 தீயணைப்புக்குழுவினரும், 24-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த அடுக்கு மாடி குடியிருப்பு சட்ட விரோதமாக வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டட இடிபாடுகளில் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
|
|||||
by Swathi on 05 Apr 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|