(இதுவுமது) தண்ணந் துறைவன் தணந்தமை- குளிர்ந்த துறையை யுடையவர் நம்மை உடம்பாற் கூடியிருந்தே உளத்தாற் பிரிந்தமையை; நம்மினும் முன்னம் வளை உணர்ந்த - அவர் குறிப்பாலறியக் கூடிய நம்மினும் முற்பட்டு இவ் வளையல்கள் நுணுகி யறிந்தன. 'தணந்தமை' என்று இறந்த காலத்திற் கூறியது கருத்து நிகழ்வு பற்றியும் தேற்றம் பற்றியும் வந்த காலவழுவமைதி. மன நோவால் தோள் மெலிவும் தோள் மெலிவால் வளை கழல்வும் நிகழ்ந்திருக்கவும், மனத்திற்கு முன்னம் வளைகள் அறிந்து கழன்றன வென்று அவற்றை அறிவுஞ் செயலு முடையனவாகக் கூறியிருப்பது, துயர் மடமையின் (pathetic fallacy) பாற்படும்.
கலைஞர் உரை:
குளிர்ந்த துறைகளுக்குச் சொந்தக்காரரான அவர் என்னை உடலால் கூடி உள்ளத்தால் பிரிந்திருப்பதை என்னைக் காட்டிலும் என் கை வளையல்கள் முன்னமே அறிந்துவிட்டன.
சாலமன் பாப்பையா உரை:
குளிர்ந்த துறைகளுக்குச் சொந்தக்காரரான அவர் என்னை உடலால் கூடி உள்ளத்தால் பிரிந்திருப்பதை என்னைக் காட்டிலும் என் கை வளையல்கள் முன்னமே அறிந்துவிட்டன.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(இப்போது காதலி அவனைப்பற்றி எண்ணிக்கொள்ளு கிறாள்:) அன்புள்ள காதலர் என்னை விட்டுப் பிரிந்து போனார் என்பதை எனக்கும் முன்னால் அறிந்தவை என் வளையல்களே. (என் மெலிவை இவ்வளையல்களே காட்டும்.)
Translation
My severance from the lord of this cool shore,
My very armlets told me long before.
Explanation
My bracelets have understood before me the (mental) separation of him who rules the cool seashore.