LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சி ஜன.16-ம் தேதி தொடங்குகிறது.

தமிழில் மொழிபெயர்த்த 200 தொழிற்கல்வி புத்தகங்கள் வெளியாகிறது

 

சென்னை தமிழக அரசின் பன்னாட்டுப் புத்தகக் காட்சி நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் 16-ம் தேதி தொடங்குகிறது. இதில் மருத்துவம், பொறியியல், சட்டம் சார்ந்த படிப்புகளுக்குத் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட 200 புத்தகங்கள் வெளியிடப்பட உள்ளன.

 

பன்னாட்டுப் புத்தகக் காட்சி

 

ஜெர்மனியின் ‘பிராங்பர்ட்’ சர்வதேச புத்தகக் காட்சி 1949-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதுவே உலகின் பெரிய புத்தகக் காட்சியாக விளங்குகிறது. அதேபோல், தமிழ கத்திலும் பன்னாட்டுப் புத்தகக் காட்சியை நடத்துவதற்கு பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்தது.

 

அதன்படி முதல் பன்னாட்டு புத்தகக் காட்சி கடந்த ஆண்டு, பபாசியின் சென்னை புத்தகக் காட்சியுடன் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது. இதற்கு பரவலாக வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து நடப்பு ஆண்டு 2-வது பன்னாட்டுப் புத்தகக் காட்சி ரூ.6 கோடி செலவில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வரும் ஜன.16, 17 மற்றும் 18-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

 

இந்த ஆண்டு புத்தகக் காட்சிக்கு, தொ டக்க காலம் முதல் தற்போதைய செயற்கை நுண்ணறிவு வரை எழுத்துகள் எப்படி வளர்ச்சி அடைந்துள்ளன என்பது மையப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு காட்சியில் 30 நாடுகள் வரை பங்கேற்றன. அதில் 120 நூல்களை வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

 

10 மாநிலங்களும் கலந்து கொள்கின்றன

 

அவற்றில் 52 நூல்கள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டு பன்னாட்டுப் புத்தகக் காட்சியில் 39 நாடுகள் பங்கேற்க உள்ளன. இதுதவிர நமது நாட்டிலிருந்து 10 மாநிலங்களும் கலந்து கொள்கின்றன. இதன்மூலமாக 50 மொழிகளை சேர்ந்த புத்தகப் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்கள், ஆராய்ச்சி யாளர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் பங்கேற்கின்றனர். மொத்தம் 3 நாட்கள் நடைபெறும் இந்த புத்தகக் காட்சியில் கருத்தரங்குகள், நூல் வெளியீட்டு விழாக்கள், குழு விவாதங்கள் போன்ற நிகழ்வு களும் இடம்பெறும்.

 

மேலும், மாலையில் இந்தியா மற்றும் மலேசியாவின் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இத்தகைய புத்தகக் காட்சிகள் மூலமாகத் தமிழ்ப் படைப்புகள் உலக ளவில் எடுத்துச் செல்லப்படுகின்றன. அதேபோல, இந்த ஆண்டு புதிய முயற்சியாக 20 இலக்கிய முகவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் எழுத்தாளர்கள் மற்றும் வெளி நாட்டுப் பதிப்பு நிறுவனங்களுக்கும் இடையே பாலமாக இருப்பார்கள். மேலும், புத்தகக் காட்சியின் நிறைவு நாளில் மருத்துவம், பொறியியல், சட்டம் சார்ந்த படிப்புகளுக்குத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 200 புத்தகங்கள் வெளியிடப்பட உள்ளன. இவ்வாறு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

by Kumar   on 14 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.