|
|||||
தமிழ் மொழி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது |
|||||
தமிழ் மொழி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறிய ஐகோர்ட் கிளை, எழுத்து சீர்திருத்தம் கோரிய மனுவை முடித்து வைத்தது.
*********************************
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த அபிமானி (எ) சந்திரசேகரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த வமனுவில், "தமிழ் எழுத்துக்களில் பல்வேறு காலகட்டங்களில் எழுத்து சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது.
****************************************
ஆனால், இதுவரை முழுமையாக சீர்திருத்தம் செய்யவில்லை. உயிர்மெய் எழுத்துக்களான 216 எழுத் துக்களில் 180 எழுத்துக்கள் அனைத்து தரப்பினரும் சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. 'உ' மற்றும் 'ஊ' வரிசை யிலுள்ள 36 எழுத்துக்கள் சற்று கடினமாக உள்ளன.
************************************
எனவே, இந்த 36 எழுத்துக்களையும் அனைத்து தரப்பினரும் சுலபமாக அறிந்து கொள்ளவும், பேசவும், எழுதும் வகையிலும் எழுத்து சீர்திருத்தம் செய்திடும் வகையில் உயர் வல்லுநர் குழு அமைக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
******************************
சிங்கப்பூரில் தமிழே, தேசிய மொழி
**********************************
இந்த மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி ஜெ.நிஷா பானு ஆகியோர், "பல்வேறு வெளிநாடுகளில் குறிப்பாக சிங்கப்பூர் நாட்டில் இந்திய மொழியான தமிழே, தேசிய மொழியாக அங்கீகாரிக்கப்பட்டுள்ளது. பழ மையானதும், தொன்மை யானதுமான மொழியான தமிழ் மொழிதொடர்பான இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது.
****************************
இதுபோன்ற மனுக்கள், நீதி மன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையில் உள்ளது. எனவே, எதிர்காலங்களில் இதுபோன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்பட வேண்டும்'' எனக்கூறி மனுவை முடித்து வைத்தனர்.
தமிழ் மொழி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறிய ஐகோர்ட் கிளை, எழுத்து சீர்திருத்தம் கோரிய மனுவை முடித்து வைத்தது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த அபிமானி (எ) சந்திரசேகரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த வமனுவில், "தமிழ் எழுத்துக்களில் பல்வேறு காலகட்டங்களில் எழுத்து சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இதுவரை முழுமையாக சீர்திருத்தம் செய்யவில்லை. உயிர்மெய் எழுத்துக்களான 216 எழுத் துக்களில் 180 எழுத்துக்கள் அனைத்து தரப்பினரும் சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. 'உ' மற்றும் 'ஊ' வரிசை யிலுள்ள 36 எழுத்துக்கள் சற்று கடினமாக உள்ளன. எனவே, இந்த 36 எழுத்துக்களையும் அனைத்து தரப்பினரும் சுலபமாக அறிந்து கொள்ளவும், பேசவும், எழுதும் வகையிலும் எழுத்து சீர்திருத்தம் செய்திடும் வகையில் உயர் வல்லுநர் குழு அமைக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார். சிங்கப்பூரில் தமிழே, தேசிய மொழி இந்த மனுவை 2023 அக்டோபர் 27-ம் தேதி விசாரித்த தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி ஜெ.நிஷா பானு ஆகியோர், "பல்வேறு வெளிநாடுகளில் குறிப்பாக சிங்கப்பூர் நாட்டில் இந்திய மொழியான தமிழே, தேசிய மொழியாக அங்கீகாரிக்கப்பட்டுள்ளது. பழ மையானதும், தொன்மை யானதுமான மொழியான தமிழ் மொழிதொடர்பான இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. இதுபோன்ற மனுக்கள், நீதி மன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையில் உள்ளது. எனவே, எதிர்காலங்களில் இதுபோன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்பட வேண்டும்'' எனக்கூறி மனுவை முடித்து வைத்தனர்.
|
|||||
by Kumar on 31 Oct 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|