102 மொழிகளில் திருக்குறள்
செம்மொழியாம் தமிழுக்கென்றே இயங்கும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் 102 மொழிகளில் தமிழை மொழிபெயர்க்கும் முயற்சியில் ஈடுபட உள்ளது. ஆங்கிலத்தில் 18 உரைகளுடன் திருக்குறள் சரி செறிவடக்க பதிப்பாக செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள 21 மொழிகளில் ஐந்து மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.தற்போது 22 மொழிகளை மொழிபெயர்க்கும் திட்டம் துவங்கியுள்ளது. 82 மொழிகளில் மொழிபெயர்க்க தகுதியான நபர்களை தேடும் வகையில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குனர் சந்திரசேகர், 'உலகின் மூத்த மொழியான தமிழின் பழமை மிகுந்தசங்க இலக்கியங்களை உலக மக்களிடம் சேர்க்கும் வகையில் மொழிபெயர்ப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. தற்போது 102 மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்கும் திட்டம் தொடங்கியுள்ளது. இத்திட்டம் நிறைவடைகையில் தமிழர்களின் அறச்சிந்தனையை உலகம் வியக்கும்' என்று கூறியுள்ளார்.
|