LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழ் தொண்டாற்றி வரும் பாலமுருகனடிமை சுவாமிகளுக்குத் திருவள்ளுவர் விருது

சிறப்பான வகையில் தமிழ்த் தொண்டு ஆற்றி வரும் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகளுக்கு இந்த ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது வழங்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

கடந்த ஆண்டுக்கான அண்ணா, காமராசர், பாரதியார், பாரதிதாசன், திரு.வி.க., கி.ஆ.பெ.விசுவநாதம் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழக அரசு வெளி யிட்ட செய்திக்குறிப்பு:

 

தமிழுக்கும், தமிழ் மொழி, பண் பாட்டு வளர்ச்சிக்கும் தொண்டாற்று வோருக்கு தமிழக அரசு பல்வேறு விருதுகள், சிறப்புகளை அளித்து வருகிறது. அந்த வகையில், பள்ளி மாணவர்களுக்குக் கடந்த 1983-ம் ஆண்டிலிருந்து திருக்குறள் ஒப்பித்தல், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி, வெற்றி பெறும் மாணவர்களுக்கு விழா எடுத்து ரூ.3 லட்சம் பரிசு வழங்கியும், உலகத் திருக்குறள் மாநாட்டை மாநில அளவில் 2 முறை நடத்தி தமிழ்த் தொண்டாற்றி வரும் ரத்தினகிரி தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகளுக்கு 2024-ம் ஆண்டுக் கான திருவள்ளுவர் விருது வழங்கப்படுகிறது.

 

விருது தொகையாகத் தலா ரூ.2 லட்சம்

 

அதேபோல, அண்ணாவின் முதன்மை தொண்டராகப் பாராட்டப்பட்ட பத்தமடை பரமசிவத்துக்குக் கடந்த 2023-ம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருதும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான உ.பலராமனுக்கு பெருந்தலைவர் காமராசர் விருதும், தமிழக அரசின் முதன்மையான பல்கலைக்கழகங்கள் மற்றும் கேரள அரசின் 10, 12-ம் வகுப்பு பாடத் திட்டத் தில் இடம்பெறும் அளவுக்குக் கவிதை கள் படைத்த கவிஞர் பழனி பாரதிக்கு மகாகவி பாரதியார் விருதும், 92-வது வயதிலும் அருந்தமிழ்ப் பணியாற்றி வரும் எழுச்சிக் கவிஞர் ம.முத்தரசு வுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருதும் வழங்கப்படுகின்றன.

 

பல்வேறு நாடுகளின் ஆவணக் காப்பகங்களில் தகவல்களைத் திரட்டி வரலாற்று நூல்களை எழுதியவரும், சோழமண்டலக் கடற்கரையை முழுமை யாக ஆய்வு செய்தவருமான பேராசிரியர் எஸ்.ஜெயசீல ஸ்டீபனுக்கு தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருதும், தமிழ் இலக்கணத்தை மாணவர்கள் எளிதாக கற்கும் வகையில் பாடல்களாகத் தந்த இரா.கருணாநிதிக்கு முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருதும் வழங்கப்படுகின்றன.

 

விருதுகள் பெறும் அனைவருக்கும் விருது தொகையாகத் தலா ரூ.2 லட்சம், ஒரு பவுன் தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கப்பட்டு, பொன்னாடை அணி வித்து சிறப்பிக்கப்படுவார்கள். விருது களை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார்

by Kumar   on 14 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.