|
|||||
கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை. |
|||||
கைப்பேசியில் அழைப்பவரின் பெயரைத் திரையிலேயே காண்பிக்கும் வசதியைத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்குமாறு பரிந்துரைத்துள்ளது தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம்(டிராய்).
கைப்பேசியில் அழைப்பவரின் பெயரைத் திரையிலேயே காண்பிக்கும் வசதியைத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்குமாறு பரிந்துரைத்துள்ள தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்), இந்தியாவில் விற்கப்படும் அனைத்து கைப்பேசி சாதனங்களிலும் சிஎன்ஏபி வசதி இருப்பதை உறுதிப்படுத்தப் போதிய அறிவுறுத்தல்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. புதிய வசதியை அரசு அமல்படுத்தினால் தங்களுக்குப் பாதிப்பில்லை என ட்ரூ காலர் நிறுவனம் வரவேற்றுள்ளது.
பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் மற்றும் சொந்தப் பகுப்பாய்வின் அடிப்படையில் 'இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் அழைப்பாளர் பெயர் அறிவிப்பு சேவையை (சிஎன்ஏபி)அறிமுகப்படுத்துவது தொடர்பாக இறுதிப் பரிந்துரைகளை டிராய் வெளியிட்டது.
வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும்.
இதுதொடர்பாக டிராய் வெளியிட்ட அறிவிப்பில், மோசடி அழைப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க நுகர்வோருக்கு உதவும் நடவடிக்கையாக, இந்தியத் தொலைத்தொடர்புத் துறை கைப்பேசிகளில் அழைப்பாளர் பெயர்களைக் காண்பிக்கும் வசதி கூடுதல் சேவையாக அனைத்துத் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும்.
ஒரு பயனாளி செல்போனுக்கு அழைப்பு வரும்போது, அழைப்பாளர் பெயர் திரையில் காட்சிப்படுத்த வேண்டும்.
இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் நடைமுறைப்படுத்தப்படும் சிஎன்ஏபி திட்டத்தின் தொழில்நுட்ப மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது.
பரிந்துரைகள் முழுமையாக ஏற்கப்பட்டு முறையான அறிவிப்பு வெளியான பிறகு, இந்தியாவில் விற்கப்படும் அனைத்துக் கைப்பேசி சாதனங்களிலும் சிஎன்ஏபி வசதி இருப்பதை உறுதிப்படுத்தப் போதிய அறிவுறுத்தல்களை மத்திய அரசு வெளியிட வேண்டும்.
எனினும், மத்திய நிறுவனங்கள் விவகாரத் துறை, ஜிஎஸ்டி ஆணையம் அல்லது அரசிடம் பதிவு செய்யப்பட்டுள்ள வர்த்தக முத்திரையில் அந்தப் பெயர் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
வாடிக்கையாளர் விண்ணப்பப் படிவத்தில் கைப்பேசி சந்தாதாரரின் பெயரின் உரிமையை நிரூபிக்கப் போதிய ஆவணங்களைச் சந்தாதாரர் நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும்.சந்தாதாரர் வழங்கிய பெயர் அடையாளத் தகவலைச் சேவையின் நோக்கத்திற்காகப் பயன்படுத்த வேண்டும் என்று டிராய் தனது பரிந்துரைகளில் தெரிவித்துள்ளது.
அழைப்பாளர் பெயர் அறிவிப்பு சேவை
இந்தத் திட்டம் குறித்து பரிந்துரைகளைச் சமர்ப்பிக்குமாறு டிராய் அமைப்பிடம் மத்தியத் தொலைத்தொடர்புத் துறை கடந்த 2022-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் கேட்டுக்கொண்டது.
அதன்படி, இந்த முன்மொழிவை நடைமுறைப்படுத்துவது பற்றி பொதுமக்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், கைப்பேசி உற்பத்தியாளர்கள் ஆகிய பங்குதாரர்களிடம் டிராய் கருத்துகளைக் கோரியது. பங்குதாரர்களின் கருத்துகள் தொடர்பாகக் கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச்சில் விவாதமும் நடைபெற்றது.
ஏறக்குறைய 40 பங்குதாரர்கள் தங்கள் கருத்துகளைச் சமர்ப்பித்தனர், மேலும் ஐந்து பங்குதாரர்கள் தங்கள் எதிர்க் கருத்துகளை அளித்திருந்தனர், அதன் பிறகு மார்ச் 2023-ல் நேரிடையாக விவாதிக்கப்பட்டது.
அதன்படி, பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் மற்றும் சொந்தப் பகுப்பாய்வின் அடிப்படையில் 'இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் அழைப்பாளர் பெயர் அறிவிப்பு சேவையை (சிஎன்ஏபி)அறிமுகப்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை டிராய் இறுதி செய்துள்ளது.
நுகர்வோருக்கு நலனுக்கான அனைத்து முயற்சிகளையும் வரவேற்பதாகத் தெரிவித்துள்ள காலர் நிறுவனம், புதிய வசதியை அரசு அமல்படுத்தினால் தங்களுக்குப் பாதிப்பில்லை எனத் தெரிவித்துள்ளது. |
|||||
by Kumar on 06 Mar 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|