உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என்.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
தமக்கு பயன் உள்ள போது நட்பு செய்து பயன் இல்லாத போது நீங்கிவிடும் தகுதியில்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன பயன், இழந்தாலும் என்ன பயன்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பு இலார் கேண்மை - தமக்குப் பயனுள்வழி நட்புச் செய்து அஃது இல்வழி ஒழியும் ஒப்பிலாரது நட்பினை; பெறினும் இழப்பினும் என் - பெற்றால் ஆக்கம் யாது? இழந்தால் கேடு யாது? (தமக்கு உற்றன பார்ப்பார் பிறரோடு பொருத்தமிலராகலின், அவரை 'ஒப்பிலார்' என்றார். அவர் மாட்டு நொதுமல் தன்மையே அமையும் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
செல்வம் மிக்க காலத்து நட்புக் கொண்டு அஃது அற்ற காலத்து நீங்குகின்ற நிகரில்லாதார் நட்பைப் பெற்றதனால் வரும் நன்மை யாது? இழந்ததனால் வரும் தீமை யாது?. மக்களுள் இவரோடு ஒத்த இழிவுடையார் இன்மையான் ஒப்பிலார் என்றார். இது காலபுருடர் நட்புத் தீதென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
உறின் நட்டு அறின் ஒருவும் - தமக்கொரு பயனுள்ள விடத்து நட்புச்செய்து அஃதில்லாத விடத்து நீங்கிவிடும்; ஒப்புஇலார் கேண்மை-உள்ளத்தாற் பொருந்தாதவரது நட்பை; பெறினும் இழப்பினும் என்-பெற்றாலும் பெற்றபின் இழந்தாலும் இரண்டிற்கும் என்ன வேறுபாடுண்டு ? ஒன்றுமில்லை. தந்நலமே கருதுபவர் உள்ளத்தாற் பொருந்தாராதலின் ஒப்பிலார் என்றும், அவர் நட்பு இருப்பின் ஆக்கமும் இல்லாவிடின் கேடும் இன்மையால் ' பெறினும் இழப்பினுமென் ' என்றும், கூறினார். ஒத்தல் உள்ளம் ஒன்றுதல். ' ஒரூஉம் ' இன்னிசையளபெடை
கலைஞர் உரை:
தமக்குப் பயன்கிடைக்கும்போது நண்பராக இருந்துவிட்டு பயனில்லாதபோது பிரிந்து விடுகின்றவர்களின் நட்பு, இருந்தால் என்ன? இழந்தால்தான் என்ன?.
சாலமன் பாப்பையா உரை:
தமக்குப் பயனிருந்தால் நட்புக் கொண்டும், பயன் இல்லை என்றால் நட்பை விலக்கியும் வாழ்வதில் தமக்கு இணை இல்லாதவராய் இருப்பாரின் நட்பைப் பெற்றென்ன இழந்தென்ன?.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(பண்பில்லாதவர் இலக்கணம் இது:) ஒரு நன்மை வேண்டியபோது நட்புக் கொண்டாட வந்து அது தீர்ந்தவுடன் விட்டுப் போய்விடுகிற பொருந்தாதவர்களுடைய நட்பை அடைந்தாலென்ன? இழந்தாலென்ன?
Translation
What though you gain or lose friendship of men of alien heart,
Who when you thrive are friends, and when you fail depart?.
Explanation
Of what avail is it to get or lose the friendship of those who love when there is gain and leave when there is none ? .
Transliteration
Urinnattu Arinoruum Oppilaar Kenmai
Perinum Izhappinum En
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்