|
|||||
தமிழ்நாட்டில் முதல் பெண்ணாக செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற வைஷாலி. |
|||||
தமிழ்நாட்டைச் சேர்ந்த சதுரங்க வீராங்கனை வைஷாலி தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
செஸ் வீரர்கள் ஒவ்வொருவரின் மிகப் பெரிய கனவு என்பது கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவதுதான். ஆனால், சர்வதேச செஸ் அரங்கை பொருத்தவரை ஆண்கள் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவதை விட பெண் வீராங்கனைகள் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்தவகையில், பெண் செஸ் வீராங்கனைகள் இதுவரை 41 நபர்கள் மட்டுமே பட்டம் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.
தமிழகத்தில் முதல் பெண் வீராங்கனை
இந்நிலையில்தான், தமிழக வீராங்கனை வைஷாலி செஸ் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றுள்ளார்.
இதன்மூலம் இந்தியாவில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறும் மூன்றாவது பெண் வீராங்கனையும், தமிழகத்தில் முதல் பெண் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
இரண்டாயிரத்து 500 புள்ளிகளைக் கடந்து
செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான மூன்று தகுதிகளைப் வைஷாலி பெற்றிருந்த நிலையில், ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற எல்லோபிரேகாட் ஓபன் தொடரில் 2 வெற்றிகளைப் பதிவு செய்ததன் மூலம் 2,501.05 புள்ளிகளை வைஷாலி கடந்தார். கிளாசிக் செஸ் போட்டியில் இரண்டாயிரத்து 500 புள்ளிகளைக் கடந்து கிராண்ட் மாஸ்டராக வளர்ந்துள்ளார். இந்தியாவின் கோனேரு ஹம்பி, ஹரிகா ஆகியோரைத் தொடர்ந்து இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட் மாஸ்டர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. வைஷாலி பிரபல செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் மூத்த சகோதரி என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
முதல்வர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்தியாவின் மூன்றாம் பெண் கிராண்ட் மாஸ்டர் ஆகவும், தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் ஆகவும் உயர்ந்துள்ள வைஷாலிக்கு எனது பாராட்டுகள்!
2023-ஆம் ஆண்டு உங்களுக்கு மிகச் சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. உங்கள் தம்பி பிரக்ஞானந்தாவுடன் இணைந்து கேண்டிடேட்ஸ் தொடருக்குத் தகுதி பெற்றதன் மூலம்,அத்தொடருக்குத் தகுதி பெற்ற முதல் உடன்பிறந்தவர்கள் என்ற வரலாற்றைப் படைத்தீர்கள்.
பலருக்கும் ஊக்கமாக விளங்குகிறது
அதற்கு மேலும் மணிமகுடமாகத் தற்போது நீங்கள் கிராண்ட்மாஸ்டர் ஆகி, முதல்முறையாக உடன்பிறந்தோர் இருவர் கிராண்ட்மாஸ்டராக இருக்கும் லசாதனையைப் படைத்துள்ளீர்கள்.
உங்கள் சாதனைகளால் நாங்கள் மிகவும் பெருமைகொள்கிறோம். உங்களது தனிச்சிறப்பான பயணம் செஸ் ஆர்வம் கொண்ட பலருக்கும் ஊக்கமாக விளங்குகிறது.
நமது தமிழ்நாட்டில் பெண்களின் முன்னேற்றத்துக்கான அடையாளமாகத் திகழ்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
|||||
by Kumar on 03 Dec 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|