|
||||||||
வெல்லும் சொல் |
||||||||
‘ஆசையே துன்பத்திற்கு காரணம்’
ஆசைக்கு அணை போட்ட
அன்பான புத்தர் வாக்கு
அர்த்தம் உள்ள சொல்வாக்கு !
‘ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு கன்னத்தை திருப்பிக் காட்டு ‘
ஏசுநாதரின் சொல்வாக்கு
மாசுபட சினம் கொள்பவரை
பசுபோல் பணியச் செய்துவிடும் !
சத்திய வாக்கை தவறாமல்
கடைபிடித்து வாழ்ந்த
அரிச்சந்திரன் வரலாறு
அன்று கண்ட காந்தியை
இன்று சத்தியசோதனை
எழுத வைத்து
வாழ்வில் மகாத்மாவாக்கியது !
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடிய வள்ளலார்
வடித்த சொற்கள் – இன்று
உலக மக்களிடையே
உயிர் இரக்கம் வளர்த்தது !
அடித்தாலும் உதைத்தாலும்
பள்ளிக்குச் செல்லாத பிள்ளை
‘படித்தால் வாழ்வில்
கொடிபோல் உயரலாம் ‘
அன்னையின் சொற்கள்
பள்ளிக்கு செல்ல வைத்தது !
எமனிடம்
‘என் கணவன் இல்லாமல்
குழந்தை வரம் பலிக்குமா?!’
கேட்ட சத்யவான்சாவித்திரி
கேள்விக் கணையே
சத்யவான் உயிரை மீட்கும்
வெல்லும் சொல்லானது !
கல்லும் கசிந்துருக
கள்ளமில்லாப் பிள்ளைபோல்
சொல்லும் செயலுமிருந்தால்
வாழ்வில் உனக்கு
வெல்லும் இனிய சொல் !
பூ.சுப்ரமணியன்
வன்னியம்பட்டி ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம் |
||||||||
by Subramanian on 07 Jun 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|