வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் புதிய படத்தில், நடிக்க விருப்பம் தெரிவித்துள்ள அஜீத்தும், விஜய்யும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவே விரும்புகிறார்களாம்.
அஜீத் குமார் தன்னை வைத்து மங்காத்தா படம் எடுத்த வெங்கட் பிரபுவுடன் மீண்டும் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விஜய்யும் வெங்கட் பிரபுவுடன் படம் பண்ண ஆர்வமாக உள்ளார். இந்நிலையில், தனது புதிய படம் குறித்து வெங்கட் பிரபு கூறுகையில், நான் அஜீத் மற்றும் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க திட்டமிட்டுள்ளேன். அப்படி மட்டும் வெங்கட் படம் எடுத்தால் பல ஆண்டுகள் கழித்து அஜீத்தையும், விஜய்யையும் சேர்த்த பெருமை அவரைச் சேரும். அஜீத்தும், விஜய்யும் வெங்கட் பிரபுவின் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளது எனக்கு பெருமகிழ்ச்சி அளித்துள்ளது. ஆனால் வெங்கட்டுக்கு ஒரு சின்ன சிக்கலும் ஏற்பட்டுள்ளது.
தல, தளபதி இரண்டு பேரும் கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள். ஆனால் இருவருமே வெங்கட் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்க விரும்புகிறார்கள். வெங்கட் அஜீத், விஜய்க்கு சமமான முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஒரு கதையை தயார் செய்து கொண்டிருக்கிறாராம். கதை தயாரானதும் அவர்கள் இருவரிடமும் கால்ஷீட் பெறவிருக்கிறார்.
|