நியூயார்க் : தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்த புகாரில் ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கியும் சிக்கியுள்ளது. இதன் முன்னர் எச்.எஸ்பி.சி வங்கியும் இந்த புகாரில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த வங்கியின் இந்திய அவுட்சோர்சிங் பணிகளை அமெரிக்கா கண்காணிக்கிறது. தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி வரும் வழிகள் குறித்து அமெரிக்காவின் செனட் கமிட்டி ஆராய்ந்தது. அதில் எச்.எஸ்.பி.சி. வங்கியின் சர்வதேச கிளைகள் மூலம் பெறப்பட்ட பல முதலீடுகள் தீவிரவாத செயல்களுக்கு திருப்பி விடப்பட்டதாக கமிட்டி அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, அந்த வங்கியின் இந்திய கிளைகளின் செயல்பாடு உட்பட பல்வேறு கணக்குகள் பற்றி அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் ஆராய்ந்து வருகின்றன.
|