புளோரிடா, இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர் சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் நேற்று, நடந்து சென்று, சர்வதேச விண்வெளி நிலையத்தில் பழுதை சரி செய்தார். அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட, பல நாடுகளின் கூட்டு முயற்சியுடன், பூமிக்கு மேல் 410 கிலோ மீட்டர் உயரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து பராமரித்து வருகின்றது. இந்த விண்வெளி நிலையத்தில், இரண்டு விண்வெளி வீரர்கள் தங்கி, ஆய்வு மற்றும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சுனிதா வில்லியம்ஸ் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த பெண் என்பதும், இவர் இரண்டாம் முறையாக விண்கலத்தில் தங்கியுள்ளார் என்பதும் கூடுதல் சிறப்பாகும்.
|