|
||||||||
என்ன சொல்ல வருகின்றாய் ? |
||||||||
என்ன சொல்ல வருகின்றாய் ? என்னை சுற்றி சுற்றி வருகின்றாய்?
முகர்ந்து முகர்ந்து பார்க்கின்றாய்
உன் குச்சி கைகளால்
உன் தலையை நீயே
தடவுகிறாய், அழகிய இரு
விழிகளை அழகாக உருட்டுகின்றாய்
சோம்பலின்றி சுறு சுறு சுறுப்பாய்
எப்பொழுதும் இருக்கின்றாய்.
வரிசைக்கு ! இலக்கணத்தை படைக்கின்றாய்.
புறங்கையால் உன்னை ஒதுக்கினாலும்,
எதிர்த்து என்னை நோக்கி
வருகின்றாய், கை அழுத்தம்
கூட உன் மேனியை
காயப்படுத்தி விடுகிறது.
மென்மையான படைப்பு நீ !
ஆனால் ! மன வலிமையில்
யானையை விட !
வலிமையானவன் நீ
அவ்வப்போது !
சோம்பலினால் சுருண்டு போகும்
நான், உன்னை உதாரணம்
காட்டி உத்வேகம் கொள்கின்றேன்
எறும்பு என்று
பெயர் இருப்பதனால் என்றும்
நீ உறங்குவதில்லையோ ! |
||||||||
What you are telling? | ||||||||
by Dhamotharan.S on 26 Oct 2016 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|