|
|||||
இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கைக்குக் குடிபெயர்ந்து 200 ஆண்டுகள் நிறைவு - தபால் தலை வெளியிட்ட மத்திய அரசு |
|||||
கடந்த 1800-களில் இந்தியாவிலிருந்து ஏராளமான தமிழர்கள் இலங்கைக்குத் தேயிலைத் தோட்ட வேலைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களில் பலர் அங்கே குடிபெயர்ந்தனர். அவ்வாறு இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கைக்குக் குடிபெயர்ந்து சுமார் 200 ஆண்டுகள் கடந்துவிட்டன.
இந்த தருணத்தைச் சிறப்பிக்கும் வகையில் நினைவு தபால் தலை வெளியிட மத்திய அரசு முடிவு செய்தது. அந்த அடிப்படையில் இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கைக்குக் குடிபெயர்ந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் சிறப்புத் தபால் தலை டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது.
இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர்
பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்ட தபால் தலையை, இலங்கை கிழக்கு மாகாண கவர்னர் செந்தில் தொண்டைமான் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். |
|||||
by Kumar on 31 Dec 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|