LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

இந்தியாவிலேயே முதல் முறையாக திருப்பதி ஏழுமலையானுக்கு 24 கோடி செலவில் 32 அடி உயர தேர் !!!

திருப்பதி ஏழுமலையான் திருகோவிலில், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெங்கடேஸ்வர சுவாமிக்கு 24 கோடி செலவில் 32 அடி உயரமுள்ள தங்க ரதம் தயாராகிவருகிறது. தங்க ரத வேலைபாடுகள் குறித்து, தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ கூறியதாவது, திருப்பதி கோயிலுக்காக 32 அடி உயரத்தில் தங்க ரதம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்த மாதம் 27ம் தேதிக்குள் பணிகள் அனைத்தும் நிறைவு பெறும். 30ம் தேதி காலை சோதனை ஓட்டம் நடத்தப்படும். வரும் அக்டோபர் 10ம் தேதி நடைபெறும் பிரம்மோற்சவமும், மாலை 5 மணிக்கு தங்க ரத ஊர்வலமும் நடக்கிறது. தமிழகத்திலுள்ள மதுரை, சுவாமி மலை, கும்பகோணம் ஆகிய இடங்களில் இருந்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு தங்க ரதம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே 32 அடியில் தங்க ரதம் செய்யப்படுவது, திருப்பதி கோயிலில் மட்டும்தான். இதற்கான தங்கம் பக்தர்களிடம் நன்கொடையாக பெறாமல், தேவஸ்தான கருவூலத்திலிருந்து பெறப்பட்டு செய்யப்பட்டுள்ளது. 74 கிலோ தங்கம், 2,900 கிலோ காப்பர், 25 டன் மரப்பலகைகளுடன் 24 கோடியில் தங்க ரதம் தயாராகி வருவதாக சீனிவாசராஜூ தெரிவித்துள்ளார்.

by Swathi   on 24 Sep 2013  0 Comments
Tags: திருப்பதி ஏழுமலையான்   தங்க தேர்   Gold Chariot   Tirupathi Temple           
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறளில் மறைமொழி - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் மறைமொழி - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் சொல்லும் செயலும் - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் சொல்லும் செயலும் - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் மெய்வேல் பறியா நகும்! - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் மெய்வேல் பறியா நகும்! - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் உடையர் எனப்படுவது...! - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் உடையர் எனப்படுவது...! - கி. ஆ. பெ. விசுவநாதம்
குடியும் குறளும் - கி. ஆ. பெ. விசுவநாதம் குடியும் குறளும் - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் இரந்து வாழும் வாழ்வு - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் இரந்து வாழும் வாழ்வு - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் கூத்தாட்டு அவைக்குழாம்? - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் கூத்தாட்டு அவைக்குழாம்? - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் கயமை - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் கயமை - கி. ஆ. பெ. விசுவநாதம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.