|
|||||
கனவு இல்லம் என்ற பெயரோடு ஆறு எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் |
|||||
கனவு இல்லம் என்ற பெயரோடு ஆறு எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக கனவு இல்லம் என்ற பெயரோடு தமிழில் சாகித்திய அகாதமி மற்றும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி தமிழ் விருது ஆகிய இரு விருதுகளையும் பெற்ற ஈரோடு தமிழன்பன், கவிஞர் புவியரசு, முனைவர் இ. சுந்தரமூர்த்தி, (பூமணி) பூமாணிக்கவாசகம், முனைவர் கு. மோகனராசு இமையம், வெ.அண்ணாமலை ஆகிய ஆறு பேருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை வழங்கியுள்ளார். ஈரோடு தமிழன்பன் ஈரோடு சென்னிமலை பகுதியினைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் ந.செகதீசன் 2004-ஆம் ஆண்டு இவருடைய 'வணக்கம் வள்ளுவ' என்னும் கவிதை தொகுப்பு சாகித்திய அகாதமி விருது வென்றது. தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார். கவிஞர்,ஓவியர் சொற்பொழிவாளர், திரைப்பட இயக்குனர் எனப் பன்முகம் கொண்டவர். புவியரசு அவர்கள் உடுமலைப்பேட்டை அருகே உள்ள லிங்கவ நாயக்கன் புதூர் பகுதியினைச் சேர்ந்தவர். இயற்பெயர் சு.ஜெகநாதன் ஆகும். 'கையொப்பம்' என்ற இவருடைய கவிதை தொகுப்பு 2009 ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றது. மேலும் 2007-ல் இவருடைய 'புரட்சிக்காரன்' என்ற மொழிபெயர்ப்பு நூல் சாகித்திய அகாதமி வென்றதும் குறிப்பிடத்தக்கது. இ.சுந்தரமூர்த்தி கோயம்புத்தூர் வெள்ளலூர் பகுதியினைச் சேர்ந்தவர். 2012-ஆம் ஆண்டு கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி தமிழ் விருது பெற்றவர். பூமணி என்று புகழ்பெற்ற பூமாணிக்கவாசகம் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியினைச் சேர்ந்தவர். பிறகு, வெக்கை, வரப்புகள், வாய்க்கால், அஞ்ஞாடி ஆகியவை இவருடைய குறிப்பிடத்தக்க படைப்புகள். அஞ்ஞாடி புதினம் 2014 ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றது. முனைவர் கு. மோகனராசு 2014 ஆம் ஆண்டு கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி தமிழ் விருது பெற்றவர். திருக்குறளை மக்களிடம் முழுமூச்சோடு பரப்பும் பணி செய்பவர். இமையம் என்று அறியப்படும் வெ. அண்ணாமலையார் அவர்கள் கடலூர் மாவட்டம் கழுதூரில் பிறந்தவர்.2020 ஆம் ஆண்டு 'செல்லாத பணம்'என்ற இவருடைய புதினம் சாகித்திய அகாதமி விருது பெற்றது. |
|||||
by R.Gnanajothi on 08 Jul 2022 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|