|
|||||
சந்திராயன்- 3 விண்கல வெற்றி, சாதனையின் உச்சத்தைத் தொட்டுள்ள இஸ்ரோ |
|||||
சந்திராயன் என்ற திட்டத்தின் கீழ் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நிலவில் ஆய்வு செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சந்திராயன்-1 சந்திராயன் -2 சந்திராயன் திட்டத்தின் கீழ் இரண்டாவதாக செலுத்தப்பட்ட விண்கலம் சந்திராயன்-2. இஸ்ரோவின் தலைவராக கே.சிவன் மற்றும் திட்ட இயக்குனராக வனிதா முத்தையா அவர்களும் இருந்தனர். நிலவின் மேற்பரப்பில் உட்கூறுகளை ஆய்வு செய்யவும்,நிலவில் தண்ணீர் இருப்பதற்கான இடங்களை கண்டறியவும் அனுப்பப்பட்டது.2019- ஆம் ஆண்டு, ஜூலை, 22 அன்று GSLV Mark III ஏவூர்தி மூலம் ஏவப்பட்டது. இவ்விண்கலச் சோதனை தோல்வியில் முடிந்தாலும், உலக நாடுகளின் கவனத்தை இந்தியாவின் பக்கம் திருப்புவதாக இருந்தது. சந்திராயன்-3 சந்திராயன் திட்டத்தின் கீழ் விண்ணில் செலுத்தப்பட்டுள்ள மூன்றாவது விண்கலம் சந்திராயன் -3 . இஸ்ரோ தலைவர் சோம்நாத்.திட்ட இயக்குனர் வீரமுத்துவேல்.இதனை ஜூலை 14-ஆம் தேதி, 2023 அன்று LVM3 M4 என்ற ஏவூர்தி மூலம் சதிஷ் தான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து வெற்றிகரமாக ஏவியுள்ளது இஸ்ரோ. ஆகஸ்ட் 5-ஆம் தேதி சந்திரனின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக இவ்விண்கலம் நிலை நிறுத்தப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென்புறப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய நான்காவது நாடாக இருந்த இந்தியா,தென் துருவப் பகுதியில் தரை இறங்கிய முதல் நாடு என்ற பெருமையினைப் பெற்றது.சந்திராயன்-3, விக்ரம் என்ற தரை இறங்கியையும் (Lander) பிரக்கியான் என்ற தரை ஊர்தியையும் (Rover) உள்ளடக்கியது. விக்ரம் தரையிறங்கியில் ஆறு கருவிகள் ஆய்விற்கென பொருத்தப்பட்டுள்ளன. ChaSTE (வெப்பத்தின் அளவை சோதனை செய்ய), ILSA (நிலவில் ஏற்படும் அதிர்வுகளை அளவீடு செய்ய), RAMBHA (நிலவில் இருக்கும் வாயுக்கள் பற்றி சோதனை செய்ய), APXS (நிலவின் மேற்பரப்பில் உள்ள துகள்களின் தன்மையை ஆய்வு செய்ய) LIBS (லேசர் ஆய்வினை மேற்கொள்ள) மற்றும் Retroreflector Aare என்ற கருவியும் இணைக்கப்பட்டுள்ளது.சந்திராயன்-3 வெற்றிச் சோதனை இந்திய விஞ்ஞானிகளின் உழைப்பிற்கு கிடைத்துள்ள வெற்றியாகவும், இந்தியாவின் உச்சகட்ட சாதனையாகவும் பார்க்கப்படுகிறது. |
|||||
by R.Gnanajothi on 06 Sep 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|