LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

சந்திராயன்- 3 விண்கல வெற்றி, சாதனையின் உச்சத்தைத் தொட்டுள்ள இஸ்ரோ

சந்திராயன் என்ற திட்டத்தின் கீழ் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நிலவில் ஆய்வு செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

சந்திராயன்-1
மயில்சாமி அண்ணாதுரை அவர்களை திட்ட இயக்குனராக கொண்டு செயல்பட்டதாகும்.PSLV-XL என்ற ஏவூர்தி மூலம் 2008,அக்டோபர், 22 இந்தியாவின் ஆந்திர பிரதேசம், ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து செலுத்தப்பட்டது. சந்திராயன்-1 நிலவில் நீர் மூலக்கூறுகள் இருப்பதனை கண்டறிந்தது முக்கியச் சாதனையாகும்.

சந்திராயன் -2

சந்திராயன் திட்டத்தின் கீழ் இரண்டாவதாக செலுத்தப்பட்ட விண்கலம் சந்திராயன்-2. இஸ்ரோவின் தலைவராக கே.சிவன் மற்றும் திட்ட இயக்குனராக வனிதா முத்தையா அவர்களும் இருந்தனர். நிலவின் மேற்பரப்பில் உட்கூறுகளை ஆய்வு செய்யவும்,நிலவில் தண்ணீர் இருப்பதற்கான இடங்களை கண்டறியவும் அனுப்பப்பட்டது.2019- ஆம் ஆண்டு, ஜூலை, 22 அன்று GSLV Mark III ஏவூர்தி மூலம் ஏவப்பட்டது. இவ்விண்கலச் சோதனை தோல்வியில் முடிந்தாலும், உலக நாடுகளின் கவனத்தை இந்தியாவின் பக்கம் திருப்புவதாக இருந்தது.

சந்திராயன்-3

சந்திராயன் திட்டத்தின் கீழ் விண்ணில்  செலுத்தப்பட்டுள்ள மூன்றாவது விண்கலம் சந்திராயன் -3 . இஸ்ரோ தலைவர் சோம்நாத்.திட்ட இயக்குனர் வீரமுத்துவேல்.இதனை ஜூலை 14-ஆம் தேதி, 2023 அன்று LVM3 M4 என்ற ஏவூர்தி மூலம் சதிஷ் தான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து வெற்றிகரமாக ஏவியுள்ளது இஸ்ரோ. ஆகஸ்ட் 5-ஆம் தேதி சந்திரனின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக இவ்விண்கலம் நிலை நிறுத்தப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென்புறப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய நான்காவது நாடாக இருந்த இந்தியா,தென் துருவப் பகுதியில் தரை இறங்கிய முதல் நாடு என்ற பெருமையினைப் பெற்றது.சந்திராயன்-3, விக்ரம் என்ற தரை இறங்கியையும் (Lander) பிரக்கியான் என்ற தரை ஊர்தியையும் (Rover) உள்ளடக்கியது. விக்ரம் தரையிறங்கியில் ஆறு கருவிகள் ஆய்விற்கென பொருத்தப்பட்டுள்ளன. ChaSTE (வெப்பத்தின் அளவை சோதனை செய்ய), ILSA (நிலவில் ஏற்படும் அதிர்வுகளை அளவீடு செய்ய), RAMBHA (நிலவில் இருக்கும் வாயுக்கள் பற்றி சோதனை செய்ய), APXS (நிலவின் மேற்பரப்பில் உள்ள துகள்களின் தன்மையை ஆய்வு செய்ய) LIBS (லேசர் ஆய்வினை மேற்கொள்ள) மற்றும் Retroreflector Aare என்ற கருவியும் இணைக்கப்பட்டுள்ளது.சந்திராயன்-3 வெற்றிச் சோதனை இந்திய விஞ்ஞானிகளின் உழைப்பிற்கு கிடைத்துள்ள வெற்றியாகவும், இந்தியாவின் உச்சகட்ட சாதனையாகவும் பார்க்கப்படுகிறது.

by R.Gnanajothi   on 06 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம். ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.