|
|||||
தேசிய சித்தமருத்துவ நிறுவனத்திற்கும் , மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்திற்கும் ஒருங்கிணைந்த தலைமையாக பொறுப்பேற்றுள்ளார் மருத்துவர் ஆர்.மீனாகுமாரி |
|||||
தேசிய சித்தமருத்துவ நிறுவனத்திற்கும் , மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்திற்கும் ஒருங்கிணைந்த தலைமையாக பொறுப்பேற்றுள்ளார் மருத்துவர் ஆர்.மீனாகுமாரி. சென்னை தாம்பரம் சானடோரியத்தில், மத்திய ஆயுஷ் அமைச்சகம், தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநராக உள்ள மருத்துவர் ஆர்.மீனாகுமாரிக்கு மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் டைரக்டர் ஜெனரலாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.இதுவரை டைரக்டர் ஜெனரலாக சிறப்பாக செயல்பட்டு வந்த டாக்டர் கனகவல்லி அவரது விருப்பத்தின்பேரில், மீண்டும் மாநில அரசு சித்த மருத்துவ பணியிடத்திற்கு திரும்பியுள்ளார்.
சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், சித்த மருத்துவ உயர் கல்விக்கான தேசிய சித்த மருத்துவ நிறுவனம் என இருபெரும் நிறுவனங்களுக்கு ஒருவரே தலைமை வகிப்பது இதுவே முதல்முறை. பிற இந்திய மருத்துவங்கள் மிகச்சிறப்பாக வளர்ந்துவரும் நிலையில், சித்தமருத்துவம் கல்வி, ஆராய்ச்சி, மருத்துவ சேவை என்று பல தளங்களில் ஒருங்கிணைந்து வளரவேண்டியது அவசியமாகிறது. சென்னையில் இயங்கும் இந்த இரு அமைப்புகளுக்கும் கைகோர்த்து சித்தமருத்துவத்தை இந்தியாவிலும் , உலகெங்கிலும் வளர்க்க எடுக்கும் செயல்பாடுகள் மாநிலத்தின் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ சேவை , மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி என்று பல நிலைகளில் அவசியமாகிறது. உலகெங்கும் ஒரு கோடிக்கு மேல் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் பயன்பாட்டில் உள்ள சித்த மருத்துவத்தை அறியவியலில் வளர்ந்துள்ள நாடுகளுடன் உரிய புரிந்துணர்வு செய்துகொண்டு ஒருங்கிணைந்த மருத்துவ ஆராய்ச்சியை , கல்வியை வழங்குவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ள நிலையில் மருத்துவர் ஆர்.மீனாகுமாரி இந்த புதிய மத்திய ஆராய்ச்சி அமைப்பின் பொறுப்பையும் ஏற்றுள்ளது சித்தமருத்துவத்தின் ஒருங்கிணைந்த தலைமையாகவும் , பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது தலைமையில் சித்தமருத்துவம் மேலும் பல வளர்ச்சிகளை அடையட்டும். தமிழ் மருத்துவம் தழைக்கட்டும்..
|
|||||
by Swathi on 23 Nov 2022 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|