|
||||||||
திருமதி. நவநீதம்பிள்ளை -Navanethem Pillay |
||||||||
![]() திருமதி. நவநீதம்பிள்ளை அவர்களின் பிறந்த நாள் 23, செப்டம்பர் , 1941
தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நீதிபதி ஆவார். இவர் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் 2003 ம் ஆண்டு முதல் நீதிபதியாகப் பணியாற்றியவர். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் செப்டம்பர் 1, 2008 முதல் ஆகஸ்ட் 2014 வரை 6 (ஆ) ஆண்டு காலத்துக்கு இப்பதவியில் பணியாற்றினார். 1941 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் டர்பன் நகரில் பிறந்த இந்தியகுடிவழித் தமிழரானநவநீதம் பிள்ளையின் தந்தை ஒரு பேருந்து ஓட்டுநர். ஜனவரி 1965 இல் இவர் காபிபிள்ளை என்னும் வழக்கறிஞரை மணந்தார் 1982ம் ஆண்டில் அமெரிக்காவில் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் முதுகலை பட்டம் பெற்று 1988 இல் முனைவர் பட்டமும் பெற்றார். 1967 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் நட்டால் மாகாணத்தின் முதலாவது பெண் சட்டத்தரணியாக அவர் பணியாற்றத் தொடங்கினார். தென்னாபிரிக்க விடுதலைப் போராளிகளுக்கு இவரும் இவவரது கணவரும் இணைந்து நெல்சன்மண்டேலா உட்பட தென்னாபிரிக்க விடுதலைச் செயற்பாட்டாளர்களுக்கும் பாதுகாவலராகக் கடமையாற்றினர். புவியிடம் அடிப்படையிலும் பால், அனுபவ நோக்கிலும் ஐ.நா. மனித உரிமைகள் அவையின் ஆணையாளர் பொறுப்புக்கு இரு குழுக்களால் தெரிவு செய்யப்பட்டார். 1973 இல் நெல்சன்மண்டேலா ரொபன் தீவு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவரை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு வெற்றிகரமாக வாதாடி வெற்றி பெற்றார். 1992 இல் பெண்கள் உரிமைக்காகப் போராடும் சமத்துவம் இப்போது” (Equality Now) என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். 1995 இல் தென்னாபிரிக்காவின் மேல் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவ்வாறு நியமிக்கப்பட்ட முதலாவது இந்திய குடிவழித் தமிழ்ப்பெண்மணி இவரே. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர். ஜூலை 24, 2008 இல், ஐநா பொதுச் செயலர் பான் கி மூனால் நவநீதம் பிள்ளை ஐநா மனித உரிமைகள் ஆணையாளராக பதவியில் இருந்து விலகும் லூயிஸ் ஆர்பர் இற்குப் பதிலாகப் பரிந்துரைக்கப்பட்டார். ஜூலை 28, 2008 இல் இடம்பெற்ற ஐநா பொது அவையின் சிறப்பு அமர்வில் இவரது நியமனம் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. செப்டம்பர் 1, 2008 இலிருந்து நான்கு ஆண்டு காலத்துக்கு இப்பதவியில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது , என்றும் அது மேலும் ஈராண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு 2014 வரை பணியாற்றினார். இவருக்குப் பெண்கள் உரிமைக்கான முதலாவது குரூபர் பரிசு 2003-ல் வழங்கப்பட்டது தமிழ் ஈழப் படுகொலை பற்றி இவர் விசாரணை மேற்கொண்டு ஓர் அறிக்கை வெளியிட்டார்.
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
by Swathi on 28 Sep 2019 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|