LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

14 மொழிகளில் 40 ஆயிரம் பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார்

14 மொழிகளில் 40 ஆயிரம் பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார்

ஆந்திர மாநிலம் நெல்லூரில் 1946ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி எஸ்.பி. சாம்பமூர்த்தி-சகுந்தலாம்மா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் எஸ்பி்பி். இவரது மனைவி சாவித்திரி. இவர்களுக்குப் பல்லவி என்ற மகளும், சரண் என்ற மகனும் உள்ளனர். பொறியியல் படித்த எஸ்பி்பி. அவர்கள் தன் நண்பரின் உதவியால் எதார்த்தமாக ஒரு பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டார். அதுவே அவரது வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட 14 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். 1970ம் ஆண்டு தொடங்கி 2020 வரை எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி பல்வேறு முன்னணி நடிகர்களுக்கும் பாடியுள்ளார். மனிதனின் சோகங்களுக்கு மருந்தாக அமைந்தவை இவரது பாடல்கள். இசை உலகுக்கு இறைவன் கொடுத்த கொடையாக அமைந்தவர். தனிமைக்குத் துணையாக இருந்தவை இவரது பாடல்கள். பாடல்கள் மட்டுமில்லாது பல படங்களில் நடித்தும் ரசிகர்களைக் கவர்ந்தவர். பல விருதுகளையும் பெற்றுள்ளார். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் நேற்று உயிரிழந்தார். இவரது உடலுக்குத் திரை உலகினர், இசை உலகினர், மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். இவரது மறைவுக்குக் குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர் என அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சென்னை தாமரைப்பாக்கம் பண்ணைத் தோட்டத்தில் எஸ்.பி.பி. உடல் அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

by Lakshmi G   on 26 Sep 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.