இந்தியாவில் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையத்தை நிறுவ உலக சுகாதார அமைப்பு, மத்திய ஆயுஷ் அமைச்சகம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த உலகளாவிய மையம் குஜராத் மாநிலம் ஜாம் நகரில் அமைய உள்ளது.
இதுதொடர்பாக மத்திய ஆயுஷ் அமைச்சகம், உலக சுகாதார அமைப்பு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் குஜராத் மாநிலம் ஜாம் நகரில் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையத்தை நிறுவ முடிவு செய்யப்பட்டது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய ஆயுஷ் அமைச்சகம், உலக சுகாதார அமைப்பு இடையே நேற்று கையெழுத்தானது. இந்த மையம் ஏப்ரல் 21ல் இருந்து முறைப்படி துவங்கப்பட உள்ளது. பாரம்பரிய மருந்து திறன் முதற்கட்டமாக குஜராத்தில் உள்ள ஆயுர்வேத பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்த மையம் தற்காலிகமாக செயல்பட உள்ளது.
மத்திய அரசின் 250 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் அறிவியல், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் பாரம்பரிய மருந்துகளின் திறனை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த மையம் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
|