LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் திருக்குறள் மாமணி திரு. ஆ. வே. இரா. நூல் வெளியீட்டு விழா !

திருச்சிராப்பள்ளி மாவட்டம் வைரிசெட்டிப்பாளையத்தில் வாழ்ந்து, திருக்குறள் தொண்டும், தமிழ்த்தொண்டும் செய்து, பிறவிப்பெருங்கடல் நீந்திய, பெரும்புலவர் ஆ.வே.இராமசாமியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை விளக்கும் நூலினைத் தமிழார்வலர் கொப்பம்பட்டி சிவ. முத்துக்குமாரசாமி எழுதியுள்ளார். இந்த நூலின் வெளியீட்டு விழா திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் 16.07.2017 (ஞாயிறு) காலை 10 மணி முதல் பகல் ஒரு மணிவரை நடைபெற உள்ளது.

முதுமுனைவர் இரா. இளங்குமரனார் தலைமையில் நடைபெறும் விழாவில் இராம. திருவள்ளுவன் வரவேற்புரையாற்ற உள்ளார். திருக்குறள் மாமணி திரு. ஆ. வே. இரா.  நூலினையும், சிறப்பு மலரினையும் தவத்திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வெளியிட்டுச் சிறப்புரையாற்ற உள்ளார்.

நூலின் முதல்படியினை முத்தமிழ்ப் பண்ணை பா.அரங்கராசன், மு. தமிழ்மாறன், இராம. மு. கதிரேசன், இரா. இராம்குமார் ஆகியோர் பெற்றுக்கொள்கின்றனர்.. புதுவைப் பேராசிரியர் மு.இளங்கோவன் நூலினை அறிமுகம் செய்து, திறனாய்வுரையாற்ற உள்ளார். நூலாசிரியர் கொப்பம்பட்டி சிவ. முத்துக்குமாரசாமி ஏற்புரையாற்றவும், கி. நந்தகுமார். நன்றியுரையாற்றவும் உள்ளனர்.

தமிழார்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரைகளைச் செவிமடுக்க, வைரிசெட்டிப்பாளையம் திருக்குறள் பேரவையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

by Swathi   on 16 Jul 2017  0 Comments
Tags: Vairichettipalayam   Aa Ve Ramasamy   Thirukkural   திருக்குறள் தொண்டு   தமிழ்த்தொண்டு   ஆ.வே.இராமசாமியார்     
 தொடர்புடையவை-Related Articles
வள்ளுவம் படிப்போமா!! வள்ளுவம் படிப்போமா!!
திருக்குறள் பரப்பிய தமிழ்த்தொண்டர் ஆ.வே.இராமசாமி ! தமிழ் அறிஞர்கள் புகழாரம்! திருக்குறள் பரப்பிய தமிழ்த்தொண்டர் ஆ.வே.இராமசாமி ! தமிழ் அறிஞர்கள் புகழாரம்!
திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில்  திருக்குறள் மாமணி திரு. ஆ. வே. இரா. நூல் வெளியீட்டு விழா ! திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் திருக்குறள் மாமணி திரு. ஆ. வே. இரா. நூல் வெளியீட்டு விழா !
திருக்குறள் தொண்டர் கரு. பேச்சிமுத்து திருக்குறள் தொண்டர் கரு. பேச்சிமுத்து
உலக பொது மறையில் ஓர் உலக சாதனை - பரதம் 5000 உலக பொது மறையில் ஓர் உலக சாதனை - பரதம் 5000
மலேசிய பள்ளிகளில் திருக்குறள் !! மலேசிய பள்ளிகளில் திருக்குறள் !!
ஓங்கி உலகளந்த தமிழர் - 14 : அறிவு எங்கே இருக்கிறது? ஓங்கி உலகளந்த தமிழர் - 14 : அறிவு எங்கே இருக்கிறது?
ஓங்கி உலகளந்த தமிழர் - 12 : மலர்தலும் கூம்பலும் ஓங்கி உலகளந்த தமிழர் - 12 : மலர்தலும் கூம்பலும்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.