LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் சமையல் கியாஸ் இணைப்பு- மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

கியாஸ் இணைப்பு இல்லாத அனைத்து ஏழை குடும்பங்களுக்கும், சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் வகையில் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

வறுமைக் கோட்டுக்கு கீழ் நிலையில் உள்ள குடும்பங்களின் பெண் உறுப்பினர்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்க பிரதமரின் உஜ்வாலா திட்டம் கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 

இந்த நிலையில் இத்திட்டத்தை நீட்டித்து, கியாஸ் இணைப்பு இல்லாத அனைத்து ஏழை குடும்பங்களுக்குள் கியாஸ் இணைப்பு வழங்க பொருளாதார விவகாரங்களுக்காக மத்திய அமைச்சரவை அனுமதி அளித்ததாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி உள்ளார். 

இதன் மூலம் நாட்டில் 100 சதவீத வீடுகளில் எல்பிஜி கியாஸ் இணைப்பு இருக்கும். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு இணைப்புக்கும், அரசு ரூ. 1.600 மானியம் வழங்கும். இந்த மானியத் தொகை கியாஸ் இணைப்பு வழங்கும் அரசின் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்படும். 

பாதுகாப்பு டெபாசிட், சிலிண்டர் கட்டணம், பொருத்துதல் கட்டணம் ஆகியவற்றுக்காக இந்த மானியம் வழங்கப்படுகிறது. 

இத்திட்டத்தின் பயனாளிகள் கியாஸ் அடுப்பை மட்டும் வாங்க வேண்டும். இந்த சுமையையும் குறைக்கும் வகையில் அடுப்பு மற்றும் முதல் மாற்று சிலிண்டருக்கான விலையை பயனாளிகள் மாத தவணை முறையில் செலுத்த இத்திட்டம் அனுமதிக்கிறது. அதன்பின் பெறப்படும் மாற்றுச் சிலிண்டர்களுக்கான செலவை பயனாளிகளே ஏற்க வேண்டும். 

முதலில் இத்திட்டம் 2011ம் ஆண்டு சமூக பொருளாதார அடிப்படையிலான ஜாதி கணக்கெடுப்பின்படி  வழங்கப்பட்டது. பின்னர் இந்த பட்டியல் எஸ்.சி/எஸ்.டி பிரிவினரின் வீடுகள், வனப்பகுதியில் வசிப்போர், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர், தீவுகளில் வசிப்பவர்கள், பழங்குடியினர், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் என விரிவுபடுத்தப்பட்டது. 

தற்போது,  கியாஸ் இணைப்பு இல்லாத அனைத்து ஏழைகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. ஆதார் இணைப்பு: மொபைல் எண் மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் எண்-ஐ சேர்க்கும் சட்டத்தில் திருத்தம் செய்யவும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது. 

by Mani Bharathi   on 18 Dec 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’ கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’
கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை. கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை.
செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..! செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.