இங்கு காமாட்சி அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள அம்மன் பூமியில் இருந்த தானாக தோன்றியவள் என்பதால், மக்கள்
கோயில் அருகே செல்லும் போது வேகமாக அதிர்ந்து நடக்க மாட்டார்கள். மிகமிக மெதுவாக அடிப்பிரதட்சணம் போல அடியெடுத்து வைத்து கடந்து
செல்வார்கள். பச்சை போடுதல்: "பச்சை போடுதல்' என்பது இங்கு பெரிய பிரார்த்தனை. அதாவது, யாராவது ஒருவர் வீட்டில் சுபகாரியம் நடந்தால்
அம்பாளுக்கு அதிகாலையில் விசேஷ அபிஷேகம், லலிதா சகஸ்ர நாமபூஜை நடக்கும். இரவில் அம்பாளை படிச்சட்டத்தில் வைத்து அலங்காரத்துடன்
சுபகாரியம் நடக்கும் வீட்டிற்கு எடுத்து வருவார்கள்.அம்பாளின் முன்பு ஆறு மரக்கால் அரிசியை பரப்பி தேங்காய், பழவகைகள், காய்கறிகள் வெற்றிலை,
பாக்கு பூ வைத்து நைய்வேத்தியம் செய்வார்கள். கிராம தேவதை காத்தவராயனின் பிரதிநிதியாக கோயில் பூசாரி சுக்குமாந்தடி எனப்படும் மரக்கட்டை
ஒன்றை எடுத்து வருவார். இது அனுமானின் கையில் உள்ள கதாயுதம் போல தலைபாகம் உருண்டையாக செய்யப்பட்டிருக்கும்
இங்கு காமாட்சி அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள அம்மன் பூமியில் இருந்த தானாக தோன்றியவள் என்பதால், மக்கள் கோயில் அருகே செல்லும் போது வேகமாக அதிர்ந்து நடக்க மாட்டார்கள். மிகமிக மெதுவாக அடிப்பிரதட்சணம் போல அடியெடுத்து வைத்து கடந்து செல்வார்கள்.
"பச்சை போடுதல்' என்பது இங்கு பெரிய பிரார்த்தனை. அதாவது, யாராவது ஒருவர் வீட்டில் சுபகாரியம் நடந்தால் அம்பாளுக்கு அதிகாலையில் விசேஷ அபிஷேகம், லலிதா சகஸ்ர நாமபூஜை நடக்கும். இரவில் அம்பாளை படிச்சட்டத்தில் வைத்து அலங்காரத்துடன் சுபகாரியம் நடக்கும் வீட்டிற்கு எடுத்து வருவார்கள்.
அம்பாளின் முன்பு ஆறு மரக்கால் அரிசியை பரப்பி தேங்காய், பழவகைகள், காய்கறிகள் வெற்றிலை, பாக்கு பூ வைத்து நைய்வேத்தியம் செய்வார்கள். கிராம தேவதை காத்தவராயனின் பிரதிநிதியாக கோயில் பூசாரி சுக்குமாந்தடி எனப்படும் மரக்கட்டை ஒன்றை எடுத்து வருவார். இது அனுமானின் கையில் உள்ள கதாயுதம் போல தலைபாகம் உருண்டையாக செய்யப்பட்டிருக்கும். |