காத்யாயனி அம்மன் இடக்காலை மடித்து, வலக்காலைத் தொங்கவிட்டு, வலக்கையில் கிளியும், இடக்கையில் தாமரை மலரும் தாங்கி ஐந்து தலைநாகம் குடைபிடிக்க அமர்ந்தகோலத்தில் வடதிசையில் காட்சி தருவது சிறப்பு.கருவறையில் காத்யாயனி அம்மன் இடக்காலை மடித்து, வலக்காலைத் தொங்கவிட்டு, வலக்கையில் கிளியும், இடக்கையில் தாமரை மலரும் தாங்கி ஐந்து தலைநாகம் குடைபிடிக்க அமர்ந்தகோலத்தில் காட்சி தருகிறாள்.
மற்ற முனிகளைவிட உயரமாக உள்ளார் வாள்முனி. இவரை வாழ்முனி என்றும் கூறுவர். செம்முனி, முத்துமுனி, இலாடமுனி, பாலக்காட்டுமுனி, சன்யாசி முனி ஆகியோர் இடக்காலை மடக்கி, வலக்காலைத் தொங்கவிட்டபடி அமர்ந்துள்ளனர். ஜடாமுனி இரு கால்களையும் குத்துக் கால்களாகக் கொண்டு அமர்ந்து உள்ளார்.
இலாடமுனி, சிலை வடிவில் உள்ளார். பிற முனிகள் சுதை வடிவில் உள்ளனர். கஞ்சமலை ஈஸ்வரர் தனிக்கோயிலில் உள்ளார். இவருக்கு எதிரே நந்தியும் பலிபீடமும் உள்ளன. |