யோக பட்டை அணிந்து கைகளில் அட்சமாலை, சூலத்துடன் தெட்சிணாமூர்த்தியின் வித்தியாசமான வடிவம் இங்கு உள்ளது.வணிகன் ஒருவன், வியாபாரத்திற்காக 7 வண்டிகளில் மிளகு மூடைகளை ஏற்றிக்கொண்டு இவ்வழியே சென்றான். அவன் இப்பகுதியைக் கடந்தபோது, அம்பிகை ஒரு மூதாட்டியின் வடிவில் அவன் முன் சென்றாள். "தம்பி இந்த மூடையில் என்னப்பா வைத்திருக்கிறாய்? எனக்கு பசியாக இருக்கிறது.
அதில் ஏதாவது சாப்பிட இருந்தால் கொடுப்பா!' என்றாள். வியாபாரி அவளிடம், மூடையில் கரிக்கட்டைகள் இருப்பதாக பொய் சொல்லி விட்டுச் சென்று விட்டான். அவன் சந்தைக்குச் சென்றபோது, மிளகு மூடைகள் கரிக் கட்டையாகவே மாறியிருந்தது. இதனால், அதிர்ந்துபோனவன் மீண்டும் இங்கு வந்தான். அம்பிகை அவன்முன் மறுபடியும் மூதாட்டியாகத் தோன்றினாள்.
தன்னை மன்னிக்கும்படி வியாபாரி வேண்டினான். அவள் கரிக்கட்டைகள் மீண்டும் மிளகுகளாக மாற்றி அருள்புரிந்தாள். அதன்பின் வணிகன் இக்கோயிலுக்கு திருப்பணி செய்து, அம்பாளுக்கு சிலை வடித்தான். |