|
|||||
மக்களிடையே பகுத்தறிவு, அறிவியல் சிந்தனைகளைப் பரப்புவது தேசப்பற்றுள்ள ஒவ்வொரு குடிமகனின் கடமை: கட்ஜூ!! |
|||||
இந்தியா-பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது மிகத் தவறான செயல், இரண்டும் ஒன்றாகவே இருந்திருக்க வேண்டும். ஒன்றிணைந்த இந்தியாவிலே இப்போதுபோன்ற மத வெறியும் பயங்கரவாதமும் தலை தூக்கியிருக்கவே முடியாது.
பிரிவினை எப்போது ஏற்பட்டதோ அப்பொழுதிலிருந்தே பாகிஸ்தானும் ஒரு அழிவு தேசமாக மாறிவிட்டது. அங்கு தினந்தோறும், வன்முறை, உயிர்ப்பலி, கலவரம் என அந்நாடே ஒரு ஜுராசிக் பார்க் போன்று பயங்கரமானதாக மாறி வருகிறது.
நமது வரலாற்றில் ஒரு சோகமான காலம் எது என்றால், சாதி , வகுப்புவாதம், மூட நம்பிக்கை இவைகள் கோலோச்சும் இந்தக் காலம்தான். மத ரீதியான ஒரு நாட்டில் குழப்பமும், கிளர்ச்சியும் ஏற்படுவது இயற்கையானதுதான். இவற்றினை அழித்து பகுத்தறிவு, அறிவியல் சிந்தனைகளை மக்களிடையே பரப்புவது தான் தேசப்பற்று உள்ள ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.
ராஜிவ்காந்தி நினைவுக் கருத்தரங்கம் கேரளாவிலுள்ள, திருவனந்தபுரத்தில் நடந்தது பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்க்ணடேய கட்ஜு இதில் கலந்து கொண்டு இவ்வாறு பேசினார். |
|||||
by MAYIL on 05 Mar 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|