LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி அன்னா ஹசாரே இன்று முதல் உண்ணாவிரதம் !!

வலுவான லோக்பால் மசோதாவை உடனடியாக நிறைவேற்றக் கோரி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இன்று முதல் உண்ணாவிரதம் இருக்க போவதாக கூறியுள்ளார். 

 

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த, சமூக ஆர்வலரும், காந்தியவாதியுமான, அன்னா ஹசாரே, கடந்தாண்டு ஊழலுக்கு எதிராக, தொடர் போராட்டங்களை நடத்தினார். இதன் விளைவாக நாடு முழுவதும் ஊழல் தொடர்பான விழிப்புணர்வு நாட்டு மக்களிடையே ஏற்பட்டது. ஊழலுக்கு எதிராக, வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, டில்லியில், இவர் நடத்திய உண்ணாவிரத போராட்டத்துக்கு, ஆயிரக்கணக்கான மக்கள் ஆதரவு தெரிவித்ததோடு, போராட்டத்திலும் கலந்து கொண்டனர்.  

 

இந்நிலையில் அன்னா ஹசாரே தன் சொந்த கிராமமான, ராலேகான் சித்தியில், நேற்று, செய்தியாளர்களிடம், பேட்டியளித்தார், இதில் வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி, டில்லியில், உண்ணாவிரதம் இருந்தபோது, மசோதாவை நிறைவேற்றுவதாக, சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும், உறுதி அளித்தனர். இது தொடர்பாக, எனக்கு கடிதமும் எழுதினர். ஆனால், அந்த உறுதியை நிறைவேற்றாமல், எனக்கும், நாட்டு மக்களுக்கும், துரோகம் செய்து விட்டனர். 

 

இதனால் தான், நான்கு மாநில சட்டசபை தேர்தல்களில், மக்கள் தங்கள் கோபங்களை வெளிப்படுத்தி உள்ளனர். வகுப்புவாத கலவர தடுப்பு மசோதா குறித்து, மன்மோகன் சிங் பேசுகிறார். ஆனால், லோக்பால் மசோதா குறித்து, வாய் திறப்பது இல்லை. இந்த குளிர்கால கூட்டத்தொடரில், வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும். இதை வலியுறுத்தி, இன்று முதல், என் சொந்த ஊரில் உண்ணாவிரத போராட்டத்தை துவங்க உள்ளேன். இவ்வாறு, அன்னா ஹசாரே கூறினார். 

by Swathi   on 09 Dec 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.