|
|||||
லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி அன்னா ஹசாரே இன்று முதல் உண்ணாவிரதம் !! |
|||||
வலுவான லோக்பால் மசோதாவை உடனடியாக நிறைவேற்றக் கோரி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இன்று முதல் உண்ணாவிரதம் இருக்க போவதாக கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த, சமூக ஆர்வலரும், காந்தியவாதியுமான, அன்னா ஹசாரே, கடந்தாண்டு ஊழலுக்கு எதிராக, தொடர் போராட்டங்களை நடத்தினார். இதன் விளைவாக நாடு முழுவதும் ஊழல் தொடர்பான விழிப்புணர்வு நாட்டு மக்களிடையே ஏற்பட்டது. ஊழலுக்கு எதிராக, வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, டில்லியில், இவர் நடத்திய உண்ணாவிரத போராட்டத்துக்கு, ஆயிரக்கணக்கான மக்கள் ஆதரவு தெரிவித்ததோடு, போராட்டத்திலும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அன்னா ஹசாரே தன் சொந்த கிராமமான, ராலேகான் சித்தியில், நேற்று, செய்தியாளர்களிடம், பேட்டியளித்தார், இதில் வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி, டில்லியில், உண்ணாவிரதம் இருந்தபோது, மசோதாவை நிறைவேற்றுவதாக, சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும், உறுதி அளித்தனர். இது தொடர்பாக, எனக்கு கடிதமும் எழுதினர். ஆனால், அந்த உறுதியை நிறைவேற்றாமல், எனக்கும், நாட்டு மக்களுக்கும், துரோகம் செய்து விட்டனர்.
இதனால் தான், நான்கு மாநில சட்டசபை தேர்தல்களில், மக்கள் தங்கள் கோபங்களை வெளிப்படுத்தி உள்ளனர். வகுப்புவாத கலவர தடுப்பு மசோதா குறித்து, மன்மோகன் சிங் பேசுகிறார். ஆனால், லோக்பால் மசோதா குறித்து, வாய் திறப்பது இல்லை. இந்த குளிர்கால கூட்டத்தொடரில், வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும். இதை வலியுறுத்தி, இன்று முதல், என் சொந்த ஊரில் உண்ணாவிரத போராட்டத்தை துவங்க உள்ளேன். இவ்வாறு, அன்னா ஹசாரே கூறினார். |
|||||
by Swathi on 09 Dec 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|