LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

பத்ம விருதுகள் அறிவிப்பு

பத்ம விருதுகள் அறிவிப்பு

    குடியரசு தினத்தை முன்னிட்டு பொதுவாழ்வு, கலை, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விருது பெற்றோர் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 119 பேருக்குப் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்களுக்கு  பத்மவிபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்மஸ்ரீ விருது:

    சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களைத் தலைமைத் தாங்கி, ஏறக்குறைய 60 ஆண்டுகளாகத் தமிழ் இலக்கியத் துறையில் பணியாற்றி வரும் பட்டிமன்ற பேச்சாளர் திரு.சாலமன் பாப்பையா அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.   

    வடசென்னை பகுதியில் பல ஆண்டுகளாக இரண்டு ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த, மறைந்த மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    சாந்தி சமூக சேவை என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி, சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு இலவசமாகக் கல்வி முதல் பல சேவைகளைச் செய்து வந்த, மறைந்த பி.சுப்பிரமணியன் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.   

    105 வயதிலும் தளராமல் இயற்கை விவசாயம் செய்து வரும் பாப்பம்மாள் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.   

    பாம்பே ஜெயஸ்ரீ என்று அழைக்கப்படும் பாடகியான ஜெயஸ்ரீ ராம்நாத் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.   

    நாட்டின் மிகச்சிறந்த கூடைப்பந்து வீராங்கனையான பி.அனிதா அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

    வில்லுப்பாட்டு கலையில் சிறந்து விளங்கும் சுப்பு ஆறுமுகம் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  

    தனது வாழ்நாளில் சுமார் 60 ஆண்டுகள் பல கற்பனை கதாபாத்திரங்களுக்கு உயிர் ஊட்டிய மறைந்த கே.சி.சிவக்குமார் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொதுவெளியில் மலம் கழிப்பது குறித்தும், கழிப்பறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மராச்சி சுப்புராமன் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டிலுள்ள மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான ஸ்ரீதர் வேம்பு அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.   

இந்த ஆண்டு 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 10 பேருக்கு பத்ம பூஷண் விருதும்,  102 பேருக்கு பத்மஸ்ரீ விருதும், அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் இடம்பெற்றுள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

by Lakshmi G   on 26 Jan 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.