மின்சார வாகனக் கொள்கை 2021,சுற்றுச்சூழலை காக்கும் முயற்சியில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி
மின்சார வாகனம் வாங்கும் நபர்களுக்கு ரூபாய் 20,000 இலவச மானியத் தொகையாக வழங்கப்படும் என்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அவர்கள் அறிவித்துள்ளார்.
மின்சார வாகனக் கொள்கை 2021-ஐ அறிவித்திருந்த விஜய் ரூபானி அவர்கள் அடுத்த நான்கு ஆண்டுகளில் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் சாலை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளார். மேலும் மாநிலத்தின் கார்பன்-டை-ஆக்சைடு அளவினை ஆறு மில்லியன் டன்களாக குறைக்கும் திட்டங்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இக் கொள்கையில்மின்சார இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர,நான்கு சக்கர வாகனங்கள்,மின்சார ரிக்க்ஷாக்கள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மின் வாகனங்கள் பயன்பாட்டை பிரபலப்படுத்துவது,குஜராத்தை மின் வாகன மையமாக மாற்றுவது, மாசுபாட்டைக் குறைப்பது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது , மின்சார வாகனக் கொள்கையில் இளைய தலைமுறையினர், மற்றும் முதலீட்டாளர்களை ஈடுபடச் செய்வது ஆகியவை ஊக்குவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்களுக்கு மின்சாரமேற்றும் (charging) நிலையங்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும் என்றும், மின்சார வாகனம் வாங்குபவருக்கு RTO பதிவுக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் முதல்வர் விஜய் ரூபானியால் அறிவிக்கப்பட்டுள்ளது.
|