LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

நல்லெண்ணெய் குளியலின் நன்மைகள் !!

நல்லெண்ணெய் குளியல் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். ஆனால் நம் பல பேர் வருடத்திற்கு ஒரு முறை அதுவும் தீபாவளி அன்று மட்டும் தான் எண்ணெய் தேய்த்து குளிக்கின்றனர். தீபாவளிக் கொண்டாட்டத்தில் முதல் நிகழ்வு கங்கா ஸ்நானம் எனப்படுகிற எண்ணெய்க் குளியல்!  திருநாள் அன்று இருள் பிரியாத அதிகாலை, உடம்பு எல்லாம் எண்ணெய் வழிய, சிகைக்காய்த் தூள் வாசத்துடன், வெந்நீர்க் குளியல் போடும் சுகமே சுகம்! இது சம்பிரதாயமாக பின்பற்றப்பட்டு வந்தாலும், இதில் புதைந்திருக்கும் மருத்துவக் காரணங்கள் ஏராளம். 


அதிகாலையில் குளிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. காலை 4 மணிக்கு வெதுவெதுப்பான நீரில் குளிப்பதனால் சளித் தொந்தரவுகளோ, வேறு எந்த பிரச்னைகளோ வராது. அந்த நேரத்தில்தான் சுத்தமான ஆக்ஸிஜன் கிடைக்கும். மூச்சு சம்பந்தமான பிரச்னைகளும் வராமலிருக்கும். கடவுளின் பெயரால் சொல்லி வைத்தால், தவறாமல் பின்பற்றுவார்கள் என்பதற்காகத்தான் அதிகாலை எண்ணெய்க் குளியலுக்கு ஆன்மிக காரணத்தைச் சொல்லி வைத்துள்ளனர் முன்னோர்கள்.


தீபாவளி மட்டுமில்லை கார்த்திகை, மார்கழி மாதங்களில் விரதம் இருப்பது, பஜனை செய்வது, கோலம் போடுவது போன்ற சடங்குகளும், அதற்காக அதிகாலை குளியல் போடுவதும் என எல்லாமே உடல் நலத்துக்கு உகந்த விஷயங்களே! முந்தைய காலங்களில் புதன், சனிக்கிழமைகளில் ஆண்களும், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்களும் எண்ணெய்க் குளியல் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். நல்ல உடல் நலம் கிடைக்கப் பெற்றனர்.


கம்ப்யூட்டரை கட்டிக்கொண்டு கண் எரிந்து கிடப்பவர்கள் மற்றும் தூசு, புகை என சுற்றுப்புறச் சீர்கேட்டால் அவதிப்படும் எல்லோருக்குமே நல்லெண்ணெய் குளியல் புத்துயிர் தரும். இன்றைய இளம்தலைமுறை, தீபாவளியை முன்னிறுத்தியாவது ஒரே ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளித்தால் போதும், உடல் புத்துணர்ச்சி, உள்ளத்திலும் பிரதிபலிக்க உள்ளமும் தீபமாய் சுடர்விடும். 

நல்லெண்ணெய் குளியலின் நன்மைகள் !!
நல்லெண்ணெய் குளியல் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். ஆனால் நம் பல பேர் வருடத்திற்கு ஒரு முறை அதுவும் தீபாவளி அன்று மட்டும் தான் எண்ணெய் தேய்த்து குளிக்கின்றனர். தீபாவளிக் கொண்டாட்டத்தில் முதல் நிகழ்வு கங்கா ஸ்நானம் எனப்படுகிற எண்ணெய்க் குளியல்!  திருநாள் அன்று இருள் பிரியாத அதிகாலை, உடம்பு எல்லாம் எண்ணெய் வழிய, சிகைக்காய்த் தூள் வாசத்துடன், வெந்நீர்க் குளியல் போடும் சுகமே சுகம்! இது சம்பிரதாயமாக பின்பற்றப்பட்டு வந்தாலும், இதில் புதைந்திருக்கும் மருத்துவக் காரணங்கள் ஏராளம். 
அதிகாலை குளிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. காலை 4 மணிக்கு வெதுவெதுப்பான நீரில் குளிப்பதனால் சளித் தொந்தரவுகளோ, வேறு எந்த பிரச்னைகளோ வராது. அந்த நேரத்தில்தான் சுத்தமான ஆக்ஸிஜன் கிடைக்கும். மூச்சு சம்பந்தமான பிரச்னைகளும் வராமலிருக்கும். கடவுளின் பெயரால் சொல்லி வைத்தால், தவறாமல் பின்பற்றுவார்கள் என்பதற்காகத்தான் அதிகாலை எண்ணெய்க் குளியலுக்கு ஆன்மிக காரணத்தைச் சொல்லி வைத்துள்ளனர் முன்னோர்கள்'.
'தீபாவளி மட்டுமில்லை கார்த்திகை, மார்கழி மாதங்களில் விரதம் இருப்பது, பஜனை செய்வது, கோலம் போடுவது போன்ற சடங்குகளும், அதற்காக அதிகாலை குளியல் போடுவதும் என எல்லாமே உடல் நலத்துக்கு உகந்த விஷயங்களே! முந்தைய காலங்களில் புதன், சனிக்கிழமைகளில் ஆண்களும், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்களும் எண்ணெய்க் குளியல் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். நல்ல உடல் நலம் கிடைக்கப் பெற்றனர்.
கம்ப்யூட்டரை கட்டிக்கொண்டு கண் எரிந்து கிடப்பவர்கள் மற்றும் தூசு, புகை என சுற்றுப்புறச் சீர்கேட்டால் அவதிப்படும் எல்லோருக்குமே நல்லெண்ணெய் குளியல் புத்துயிர் தரும். இன்றைய இளம்தலைமுறை, தீபாவளியை முன்னிறுத்தியாவது ஒரே ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளித்தால் போதும், உடல் புத்துணர்ச்சி, உள்ளத்திலும் பிரதிபலிக்க உள்ளமும் தீபமாய் சுடர்விடும். 
by Swathi   on 23 Jun 2014  5 Comments
Tags: Oil Bath Health Tips   Sesame Oil Bath Benefits                 

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
நல்லெண்ணெய் குளியலின் நன்மைகள் !! நல்லெண்ணெய் குளியலின் நன்மைகள் !!
கருத்துகள்
22-Aug-2019 09:03:42 கீதா said : Report Abuse
மார்பகத்தில் கட்டி உள்ளது என்ன செய்ய வேண்டும் ஒப்பரேஷன் செய்யலாமா
 
03-Nov-2016 01:30:55 மதுசூதன் said : Report Abuse
நல்லஎண்ணை உடல் மற்றும் தலைக்கு பூசி 20 நேமிடம் கழித்து வெந்நீர் குளியல் நல்லது. நல்லஎண்ணை வாரம் 1 முறை குளித்தால் மூட்டுவலி வயதான காலத்தில் வராது.
 
18-Apr-2016 03:11:27 kalaiselvi said : Report Abuse
தேமல் மறைய என்ன செய்வது
 
18-Apr-2016 03:08:52 கலைச்செல்வி said : Report Abuse
வேர்க்குரு கொப்பளம் எப்படி மறைய வைப்பது
 
10-Nov-2015 10:12:17 ரஹ்மான் said : Thank you
எவ்வளவு நேரம் ஊரவைத்து குளிக்க வேண்டும்? சிகைக்காய் தூளை தலைக்கு எப்படி உபயோகிப்பது ?
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.